நேத்ரனுக்கு சொந்த வீடு இல்லை.. அரசு மருத்துவமனையில் தான் ட்ரீட்மென்ட்.. கடைசி ஆசை! வருண் உருக்கம்
சென்னை: சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் கடந்த செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார். நேத்திரன் 22 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் அவருக்கு சொந்த வீடு கிடையாது, அவருடைய கடைசி ஆசை இதுதான் என்று சில விஷயங்களை அவரோடு நடித்த நடிகர் வருண் கூறியிருக்கிறார்.
விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என பல சேனல்களில் 20 வருடங்களுக்கு மேலாக சீரியலில் நடித்த நேத்ரனின் இறப்பு செய்தி சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி தான். 47 வயதில் இவர் புற்று நோய்க்காக கடந்த ஆறு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இவருடைய திடீர் மரணம் ஏற்பட்டிருக்கிறது.

நேத்ரன், சீரியல் நடிகை தீபா நேத்ரனை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அபிநயா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் அபிநயா நேத்ரனுடன் பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.
நேத்ரனுக்கு வயிறு வலியில ஆரம்பிச்ச பிரச்சனை! கடைசியாக மெசேஜில் சொன்ன வார்த்தை! நடிகர் வருண் எமோஷனல்
நேத்ரன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ரஞ்சிதமே, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி போன்ற சீரியல்களில் கடைசியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட பிறகு தீவிரமாக உடல் நிலை பிரச்சனைகள் இருந்ததால் தொடர்ந்து சீரியலில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் நேத்ரன் இறப்புக்கு பிறகு அவரோடு பல சீரியல்களில் நடித்த நடிகர் சத்யா நேத்ரன் பற்றி பல தகவல்களை பேசி இருக்கிறார். அதில் நேத்ரனை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அவர் ரஞ்சிதமே சீரியலில் இருந்து விலகிவிட்டார். அந்த சீரியலில் அவருக்கு பதிலாக என்னை நடிக்க சொல்லி இருந்தார்.
அதுபோல நேத்ரன் சூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் கோபப்படவே மாட்டார். எப்போதும் பாசிட்டிவாக பேசுவார். அவர் ஆரம்பத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டார். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறார். இன்னமும் அவருக்கு சொந்த வீடு கிடையாது. அவருக்கு புற்றுநோய் கன்ஃபார்ம் செய்ததும் அரசு மருத்துவமனையில் தான் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும் முதலில் நாங்க எல்லாரும் பார்க்க வரோம் என்று சொன்னோம். ஆனால் அவர் யாரையும் நேரில் பார்க்க வர வேண்டாம் நான் முன்பு போல இப்ப இல்ல என்று சொல்லிவிட்டார். ஆனால் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திடீரென்று குரூப்பில் மெசேஜ் போட்டு எல்லோரும் என்னுடைய பொண்ணு பிறந்தநாளுக்கு வாங்க என்று சொன்னார்.

எல்லாருக்கும் நானே பிரியாணி செய்து தரப்போறேன் என்றும் சொல்லி இருந்தார். அவருடைய பிரியாணி ரொம்பவும் அருமையாக இருக்கும். ஆனால் அவர் இப்படி சொல்வது எங்களுக்கு வருத்தமாக இருந்தது. உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அவர் தினமும் எல்லாருக்கும் மோட்டிவேஷனலான ஃபார்வேர்ட் மெசேஜ் அனுப்பி விடுவார்.
கடைசியில் அவருடைய செல்போனிலிருந்து எங்களுக்கு அவர் காலம் ஆகிவிட்டார் என்ற செய்தி வந்தது. ரொம்பவும் வருத்தமாக இருந்தது. நேத்ரனின் ஆசை அவருடைய பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரணும் அதை பார்க்க வேண்டும் என்று தான்.
இப்போது தான் அவருடைய இரண்டு மகள்களுக்கும் சில வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் வெற்றி அடைவதை பார்ப்பதற்கு இப்போது நேத்ரன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று நடிகர் வருண் கண்கலங்க பேசியிருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications