விவாகரத்து போட்டோ சூட் எடுக்க காரணம் இதுதான்..வெளிச்சத்துக்கு வந்த உண்மை..கடைசியில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை சமீபத்தில் எடுத்த விவாகரத்து போட்டோ சூட் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விவாகரத்து குறித்தும் விவாகரத்து கொண்டாட்டங்கள் குறித்தும் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எதற்காக தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன் என நடிகை ஷாலினி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Serial actress Shalini has told why she conducted a divorce photo shoot

சீரியல் நடிகை ஷாலினி ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் எனும் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர்மாம் நிகழ்ச்சியில் அவரும் அவருடைய மகள் ரியாவும் கலந்து கொண்டிருந்தார்.

நடிகை ஷாலினிக்கு ஏற்கனவே மேட்ரிமோனியம் மூலமாக வீட்டில் பார்த்து ஒரு திருமணம் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த திருமண வாழ்க்கை ஒரு சில மாதங்கள் கூட நீடிக்கவில்லையாம். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆகிவிட்டதாம். அதற்கு பிறகு தான் ரியாஸ் என்கிற நபரை இவர் சந்தித்தாராம். இவர் தனியாக வாழ்ந்து வந்த நேரத்தில் ரியாஸ் ஆரம்பத்தில் இவரிடம் ஒரு ரசிகர் என்று பழகி பின்பு காதலிக்கும் செய்தியை கூறினாராம். அப்போதே அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் மனைவியோடு இல்லை என்று கூறியதாக ஷாலினி கூறியிருக்கிறார்.

Serial actress Shalini has told why she conducted a divorce photo shoot

அதே நேரத்தில் ரியாஸை, ஷாலினி அளவுக்கு அதிகமாக காதலித்து வந்தாராம். குழந்தைகள் விஷயத்தில் ஷாலினி அதிகமாக பாசத்தோடு எதிர்பார்த்து இருந்த நிலையில், ஷாலினி கர்ப்பமாக இருந்திருக்கிறார். அவருக்கு பெண் குழந்தையும் பிறந்து இருக்கிறது.
அதுவரைக்கும் தன்னுடைய குழந்தைக்காக தான் ரியாஸ் உடைய அடி உதைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு இருந்ததாகவும், ஆனால் தன்னுடைய குழந்தை முன்பு அடித்து குழந்தை அழுவதை பார்த்தும் நிறுத்தாமல் அடித்த பிறகு தனக்கு இந்த கணவர் இனி வேண்டாம் என்று முடிவெடுத்ததாக கூறியிருக்கிறார்.

ஏற்கனவே குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கு அவர் சென்னையில் தான் இருந்திருக்கிறார் துபாய்க்கு செல்லாமல் இருந்த நிலையில் ரியாஸ் அப்போது தன்னோடு வரும்படி அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் இதற்கு முன்பு என்னை அடித்தாய் உதைத்தாய் சரி என்று பொறுத்துக் கொண்டேன் ஆனால் இனி குழந்தை வந்துவிட்டது, குழந்தை முன்பு என்னை அடிக்கக்கூடாது என்று நான் கூறினேன். ஆனால் அப்போது சரி என்று சொல்லிவிட்டு பிறகு அதே சித்திரவதை தொடர்ந்தது என்று கூறி இருக்கிறார்.

Serial actress Shalini has told why she conducted a divorce photo shoot

அத்தோடு நான் இன்று இந்த கஷ்டத்தை சந்தோஷமாக கொண்டாடுகிறேன் என்றால் எவ்வளவு வலியும் வேதனையும் என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் என்பது பலரும் புரிந்து கொள்ள வேண்டும். இது எனக்கு மட்டுமல்ல என்னை போல பல பெண்கள் இதே நிலையில் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியே சமூகம் என்ன சொல்லும் என்று பயந்தபடி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இனி வாழ வேண்டிய அவசியம் இல்லை என்று இது உணர்த்துவதற்காக என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் இந்த போட்டோ சூட் வைரலாகி வரும் நிலையில் இதுவரைக்கும் சீரியல் நடிகை ஷாலினி பற்றி தெரியாமல் இருந்த பலரும் கூட இப்போது தெரிந்து கொண்டிருக்கின்றனர். அதனால் இது பிரபலமாவதற்காக தான் இப்படி ஒரு போட்டோ சூட் என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இந்த மாதிரி விவாகரத்துகளை சந்தோஷமாக கொண்டாடுவதில் தப்பு இல்லை என்றும், இன்னும் ஒரு சிலர் இப்படி கொண்டாடுவது பலருக்கு மனதில் சஞ்சலத்தை கொடுத்து விடும் என்றும் கருத்து கூறி வருகிறார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+