சிம்பு வீடு முன் தர்ணா செய்தாரே சீரியல நடிகை ஸ்ரீநிதி.. மருத்துவமனையில் தற்கொலைக்கு முயற்சியாம்
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீரியல் நடிகை ஸ்ரீநிதி திடீரென தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்பு சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை ஸ்ரீநிதி. ஜீ தமிழில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் இவர் நடித்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்த சீரியலில் நடித்த போது தான் ஸ்ரீநிதிக்கு சைத்ரா ரெட்டி, நட்சத்திரா ஆகியோர் மிகவும் நெருக்கம் ஆனார்கள். கொரோனா லாக்டவுனில் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஏகப்பட்ட இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
விஜய்யுடன் நடனமாடிய நடிகை ஷகீலாவின் தங்கை.. குக் வித் கோமாளியில் வந்த புதிய தகவல்!
நடிகை நட்சத்திரா
லாக்டவுனில் நடிகை நட்சத்திரா கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஸ்ரீநிதியுடனே தங்கி இருந்தார். இதை ஸ்ரீநிதியின் தாயே தெரிவித்திருந்தார். வலிமை படத்தில் தனது தோழி சைத்ரா ரெட்டி நடித்திருந்த போதிலும் அந்த படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ எடுத்தவரிடம் வலிமை படம் வலிமையாக இல்லை என சர்ச்சைக்குரிய கருத்தை கூறி அஜித் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார்.
சிம்புவின் ரசிகை
ஸ்ரீநிதி, சிம்புவின் தீவிர ரசிகை என சொல்லப்படுகிறது. ஆனால் அவரை தான் காதலிப்பதாகவும் அவரும் தன்னை காதலிப்பதாகவும் கூறி சிம்பு வீட்டுக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் தனது தோழியான நட்சத்திராவின் உயிருக்கு ஆபத்து என்றும் விஜே சித்ராவுக்கு ஏற்பட்ட நிலை நட்சத்திராவின் காதலனால் அவருக்கு ஏற்படும் என கூறி நட்சத்திராவுக்கே அதிர்ச்சி கொடுத்தார்.
மன உளைச்சல்
இதையடுத்து ஸ்ரீநிதியின் தாய் அந்த போஸ்ட்டை கஷ்டப்பட்டு சமூகவலைதளங்களில் இருந்து டெலிட் செய்தார். மேலும் நட்சத்திராவை பற்றி ஸ்ரீநிதி சொல்வதையெல்லாம் பெரிதுப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஸ்ரீநிதி, நட்சத்திரா தன்னை விட்டு பிரிந்ததால் மன உளைச்சலுக்குள்ளாகிவிட்டார் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்றும் அவரது தாய் தெரிவித்திருந்தார்.
தற்கொலைக்கு முயன்ற நட்சத்திரா
இதையடுத்து தற்போது ஸ்ரீநிதியை சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சலிங் கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் மருத்துவமனையில் அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனே அங்கிருந்த மருத்துவர்கள் அவரை காப்பாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை.