Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செவ்வந்தி சீரியல் நடிகைக்கு பிறந்த நாளில் நடந்த சோகம்.. கழுத்தை இறுக்கி.. கண்ணீரோடு வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியல் நடிகை சிவன்யா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் சிவன்யா தன்னுடைய பிறந்தநாளில் கண்ணீரோடு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

sevanthi serial actresses Shivanya bike accident awareness video

தனக்கு நடந்த நிகழ்வு குறித்தும் அதனால் பலரும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்றும் இவர் பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் களில் நடிக்கும் நடிகர்கள் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் செவ்வந்தி சீரியலில் நடிகை சிவன்யா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ஏற்கனவே செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக திவ்யா ஸ்ரீதர் நடித்துவரும் நிலையில் அவருடைய குடும்ப பிரச்சினை காரணமாக செவ்வந்தி சீரியல் பலருக்கும் தெரிந்ததுதான்.

அதே நேரத்தில் சீரியலில் மட்டுமல்லாமல் சிவன்யா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் அதிலும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் சமீபத்தில் தான் அவருடைய பிறந்தநாள் வந்து இருந்தது. பிறந்தநாள் அன்று அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதற்கு அதிகமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

தன்னுடைய பிறந்தநாள் அன்று instagramல் லைவில் ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருப்பாராம். ஆனால் இந்த முறை அப்படி பேசவில்லையாம். அதற்கு என்ன காரணம் என்பது குறித்து கண்ணீரோடு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் கோவிலுக்கு என்னுடைய தம்பியோடு பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது நான் கழுத்தில் பெரிய ஷால் போட்டு இருந்தேன். அதையும் கழுத்தை சுற்றி போட்டிருந்தேன். கையை வைத்து என்னுடைய தம்பியை பிடித்தபடி சரியாக தான் அமர்ந்திருந்தேன். அப்போது அதிகமாக காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்த ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னுடைய ஷால் பைக் சக்கரத்தில் சுற்றி விட்டது. நல்ல வேலையாக நான் உயிர்பிழத்தேன். என்னுடைய கழுத்தில் காயம் பட்டிருக்கிறது.

கீழே விழுந்து இருந்தால் என் நிலைமை என்ன ஆயிருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம் நான்கு வழி சாலையில் எப்படியோ நான் உயிர் பிழைத்து விட்டேன். அதனால் யாரும் இனி பைக்கில் போகும்போது கவனமாக போக வேண்டும் என்று கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. பலர் அவருக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில் இந்த மாதிரி இனி யாருக்கும் நடக்கக்கூடாது கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+