கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்.. கடைசி வரை உறுதியாக இருந்த செவ்வாழை ராசு
சென்னை: கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க மாட்டேன். கடவுள் மறுப்பு கொள்கை வேடங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று நடிகர் செவ்வாழை ராசு தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாக அவருக்கு வந்த பல வாய்ப்புகளை தட்டி கழித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் செவ்வாழை ராசு பேசிய பழைய வீடியோ தற்போது பரவி வருகிறது.
தேனியை சேர்ந்த காமெடி நடிகர் செவ்வாழை ராசு (70), முதன் முதலாக பாரதிராஜா இயக்கத்தில் 'கிழக்கு சீமையிலே' படத்தில் நடித்தார். அதன்பின்னர் தனுஷின் தந்தையான கஸ்துாரிராஜா இயக்கத்தில் 'தாய்மனசு' படத்தில் நடித்தார். 90களில் ஏராளமான படங்களில் நடித்த செவ்வாழை ராசு, பாரதிராஜாவின் பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படமும் தேனியை சுற்றித்தான் எடுக்கப்பட்டது. அப்போது பொணந்திண்ணி என்ற கதாபாத்திரத்தில் செவ்வாழை ராசு நடித்தார். அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் புகழை அவருக்கு பெற்றுத்தந்தது. அந்த சமயத்தில் மைனா, கந்தசாமி , வேலாயுதம் உள்பட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் செவ்வாழை ராசு நடித்தார்.
செவ்வாழை ராசுவின் மகன் எஸ்ஆர் தமிழன், தேனியில் செல்வாக்குள்ள பிரமுகராக திகழ்ந்தார். அவர் திடீரென சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது இறப்பை செவ்வாழை ராசுவால் தாங்கி கொள்ள முடியவில்லை.இதனால் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் சொந்த ஊரிலேயே இருந்த செவ்வாழை அரசு சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவர் சிகிச்சை பலனின்றி இன்று ( மே 18 ) காலமானார். செவ்வாழை ராசுவின் மறைவு ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
செவ்வாழை ராசுவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே கோரையூத்து கிராமத்தில் கிராம மக்களின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. செவ்வாழை ராசுவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு செவ்வாழை ராசு அளித்த பேட்டி ஒன்று இப்போது பேசுபொருளாகி உள்ளது. அவர் தனது பேட்டியில், " என் பெற்றோர் வைத்த பெயர் ராசு. குழந்தையாக நான் இருந்தபோது சிவப்பாக இருந்ததால், என்னை 'செவ்வாழை' என அழைத்தனர். பின்னர் பெயரும் செவ்வாழை ராசு என மாறிவிட்டது.

நான் கார்த்தியுடன் நடித்த 'பருத்தி வீரன்' எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. மைனா, கந்தசாமி, வேலாயுதம், பெரியமனுஷன், கருத்தம்மா, மலைக்கோட்டை, வல்லமை தாராயோ என 140க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய 100 வது படம் விஜய்யுடன் நடித்த வேலாயுதம் படம் ஆகும்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நான் நடிக்க வரவில்லை. பொழுதுபோக்காக தான் நான் நடிக்க வந்தேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.கடவுள் மறுப்பு கொள்கை வேடங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்படி வந்த பல வாய்ப்புகளை தட்டி வேண்டாம் என சொல்லி இருக்கிறேன்" இவ்வாறு செவ்வாழை ராசு பேசிய வீடியோ இன்று மீண்டும் பரவி வருகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications