தோழியின் திருமணத்தில் ஆனந்த கண்ணீர் விட்ட ஷபானா..கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: புதியதாக திருமணம் முடிந்த ஷபானா இன்று தோழியின் திருமணத்தில் செய்த செயல் வைரலாக பரவி வருகிறது.
நட்பு என்றால் இதுதானா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
ஷபானாவின் அழுகையை பார்த்து நெட்டிசன்கள் ஒரு பக்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தொடரும் காதல் திருமணங்கள்
தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வரிசை கட்டிக் கொண்டு திருமண வைபவம் நடத்திவருகின்றனர். சீரியலில் தான் அதிகமாக திருமணங்கள் நடைபெறுகிறது என்றால் நிஜத்திலும் நடைபெற்று வருகிறது. அதுவும் பல காதல் திருமணங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே ஷபானாவின் திடீர் திருமணத்திலிருந்து வெளிவராத ரசிகர்கள் இன்று ரேஷ்மாவின் திருமணத்தை பார்த்ததும் சிலருக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்து வருகிறது.

கண்ணீரோடு ஷபானா
ஷபானாவின் திருமணத்தைப் பற்றி பல வதந்திகள் பரவி கொண்டிருக்கும் நிலையில் இன்று ஷபானாவின் நெருங்கிய தோழியான ரேஷ்மாவின் திருமணத்தில் ஷபானாவும் அவரது கணவரான ஆரியனும் ஜோடியாக கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதில் தற்போது ரேஷ்மாவின் திருமணத்தில் ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கும் ஷபானாவின் வீடியோக்கள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பொங்கும் ஆனந்தக் கண்ணீர்
ரேஷ்மாவின் கழுத்தில் மதன் தாலியை கட்டியதும் ரேஷ்மாவின் அம்மா ஒரு பக்கம் சந்தோஷத்தில் அழுது கொண்டிருக்கிறார். ஆனந்தக் கண்ணீர் அவர் விட்டதை பார்த்து பக்கத்தில் இருந்த பலர் அவருக்கு ஆறுதல் கூறி கொண்டிருக்கும்போது, ஷபானா, ரேஷ்மாவின் அருகில் நின்று அவரது தாலியை சரி செய்து கொண்டிருக்கிறார். அந்த நிலையில்தான் அவரையும் மீறி அவரது கண்களைத் துடைத்துக் கொண்டு இருக்கிறார். இதை பார்த்து ஒரு சில ரசிகர்கள் ஷபானா ஆனந்த கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறார். இதுதான் பாசமா??என்று கூறிக் கொண்டிருக்கும் போது ஒருசில நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்த்து வருகின்றனர்.

காரணம் புகையா??
கல்யாணத்தில் ஓம குண்டத்தில் இருந்து அதிகமான புகை கிளம்பியதால் தான் ஷபானா கண்ணை கசக்கி அழுது கொண்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனால் தீவிரமான ரசிகர்கள் தோழியின் சந்தோசத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டு இருக்கும் எங்கள் ஷபானா என்று ஷபானாவின் புகழை பரப்பி வருகிறார்கள்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications