இளையராஜா கேட்ட ஒரு வார்த்தை.. எம்.ஏ டிகிரியையே தியாகம் செய்துவிட்டாராமே சித்ரா..!?
சென்னை: பாடகி சித்ரா இளையராஜா வார்த்தையை மீற முடியாமல் தன்னுடைய எம்.ஏ எக்ஸாமை தவற விட்டு விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
ஒரே ஒரு பாடலுக்காக தன்னுடைய தன்னுடைய எம்.ஏ படிப்பை தியாகம் செய்த சித்ரா அது குறித்து மேலும் பல தகவல்களை கூறியிருக்கிறார்.
"சின்னக்குயில்" சித்ரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சித்ரா எப்போதும் சிரித்த முகமாக இருப்பதைத்தான் அனைவரும் பார்த்திருப்பார்கள். பலருக்கும் சோகத்தில் இருந்து விடுபடுவதற்கு சித்ராவின் பல இனிமையான பாடல் தேவைப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் காதல், மெலடி, சோகம், தெய்வீகம் என பலவிதமான பாடல்களையும் பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்த பின்னணி பாடகி சித்ரா 1985 ஆம் ஆண்டு வெளியான "சிந்து பைரவி" திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் ஒரு சிந்து" என்ற பாடல் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார்.
அந்த பாடலில் இடம் பெற்ற "என் விதியை அப்பவே தெரிந்திருந்தால் கர்ப்பத்தில் நானே கரைந்து இருப்பேன்" என்ற வரிகள் பலருடைய ஸ்டேட்டஸ் சாங்குகளில் தவறாமல் ஒலிக்கும் ஒரு பாடலாக இடம் பிடித்து விடுகிறது. பொதுவாக நம்முடைய நண்பர்களின் ஸ்டேட்டஸில் இந்த ஒரு பாடல் ஏதாவது ஒரு நண்பர் கண்டிப்பாக வைத்து விடுகிறார். அந்த அளவிற்கு இப்போதும் பலருடைய மனதில் அந்த பாடல் ரிங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது.
சிந்து பைரவி திரைப்படத்தை தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து அதிகமான ரசிகர்களை தன்னுடைய பாடலுக்கு அடிமையாக வசியப்படுத்தி வைத்திருக்கிறார். இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம்.எஸ்.வி, தேவா உட்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள சித்ராவிற்கு ஆறு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு சித்ரா பேட்டி அளிக்கையில், சிந்து பைரவி படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்" என்ற பாடலை பாட மறுத்ததாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு நான் அப்படி பாட முடியாது என்று சொல்லல்ல, என்னை "நான் ஒரு சிந்து" என்ற பாட்டுக்கு தான் இளையராஜா சார் கூப்ட்டு இருந்தாரு.

ஆனா காலையில் அந்த பாடலை நான் பாடி முடிச்சிட்டேன். அப்புறம் மாலையில் எங்க அப்பா ட்ரெயின் புக் பண்ணி இருந்தார். அதனால நாங்க கிளம்பிட்டு இருந்தப்போ ராஜா சார் இன்னொரு பாட்டு இருக்கு அதையும் பாடிட்டு போக முடியுமான்னு கேட்டார்.அப்போ அப்பா எனக்கு நாளைக்கு எம்.ஏ முதலாம் ஆண்டு எக்ஸாம் இருக்குன்னு சொன்னார்.
அதற்கு ராஜா சார் எம்.ஏ எல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம். அதுக்கு மேல இதுல வரப்போகுது என்று சொன்னார். ராஜா சார் சொல்லும்போது தவிர்க்க முடியல. அந்த பாட்டை பாடிட்டு போனேன். அதனால அடுத்த நாள் எம்.ஏ எக்ஸாம் எழுதல. ஆனா அப்பா அந்த எக்ஸாம் கண்டிப்பா எழுதணும்னு சொன்னாரு. ஆனா நான் கொஞ்சம் சோம்பேறி என்பதால் அந்த எக்ஸாம் எழுதல. என்று சிரித்தபடியே பேசி இருக்கிறார்.
-
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
எந்த மனைவிக்கும் இப்படிப்பட்ட அவமானம் வரக்கூடாது.. ரவி மோகன் மனைவி ஆர்த்தி உருக்கம்.. விஜயுடன் ஒப்பீடு? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications