பாடகி ராஜலட்சுமி கணவர் குறித்து உருக்கமான பதிவு.."குறைகளால காதல் தொலஞ்சிராம” காரணம் இதுதானாம்
சென்னை: பாடகி ராஜலட்சுமி தன்னுடைய கணவர் குறித்து தன்னுடைய 11 வது திருமண நாளில் காதல் கவிதைகளை பொழிந்து இருக்கிறார்.
திருமண நாளில் தனக்காக தன்னுடைய கணவர் 11 வருடங்களாக தனக்கு தந்த சம பாதி உரிமைகள் குறித்து அந்த கவிதையில் கலந்திருக்கிறார்.
அதுபோல ராஜலட்சுமி குறித்தும் அவருடைய கணவர் இறைவன் தந்த வரமே என்று உருக்கமாக வார்த்தைகளை பகிர்ந்திருக்கிறார்.

நாட்டுப்புற கலைஞர்களாக ஒரு சில இடங்களில் மட்டுமே பரிச்சயமாகி இருந்துவந்த ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக தொடங்கியிருக்கின்றனர். இவர்கள் இருவருமே திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும் முன்னணி பாடகர்கள் ஆக மாறி இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இவர்கள் திருவிழாக் கூட்டங்களிலும் கச்சேரிகளிலும் பாடல்களைப் பாடி கொண்டிருந்தவர்கள் இன்று உலகம் முழுவதும் இவர்களுடைய பாடல் முனுமுனுக்க தொடங்கி இருக்கின்றது. ஆரம்பத்தில் கடை கோடியில் இருந்தவர்கள் முன்னேற்றத்தின் பாதையில் பயணிக்கத் தொடங்கியதும் ஏராளமான கருத்துக்கள் வருவது போலத்தான் இவர்களுக்கும் அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டு இருக்கிறது.
சமூக வலைத்தளத்தில் இவர்கள் ஆக்டிவாக இருந்து வருவதால் பல்வேறு கருத்துகளையும் இவர்கள் சந்தித்து தான் வருகின்றனர். ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவு கொடுத்தாலும், ஒரு சில நெட்டிசன்கள் இவர்கள் செய்யும் செயல்களுக்கு அதிகமாக கலாய்த்து வருகின்றனர். எப்போதுமே தங்களுடைய ரசிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் தங்களுடைய முன்னேற்றத்தில் கவனமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களுடைய 11 வது திருமண நாளுக்காக instagram பக்கத்தில் ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் செந்தில் கணேஷ் இருவரும் மாறி மாறி போஸ்ட்களை தட்டி விடுகின்றனர். அதில் ராஜலட்சுமி தனக்கு தன்னுடைய கணவர் மேடையில் பூ கொடுத்ததம்,தானும் தன்னுடைய கணவரும் இதுவரைக்கும் ஜோடியாக எடுத்த பல வீடியோக்களையும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.

அதுபோல இன்னொரு பதிவில் ராஜலட்சுமி," காதலிக்கும் போது காதல் மட்டுமே கண்ணுக்கு தெரியும். ஆனால் காதல் ஒன்றாக சேர்ந்து வாழும் போது தான் குறைகளும் தெரிய ஆரம்பிக்கும். குறைகளால் காதல் தொலைஞ்சுராம காப்பாத்த பேரன்பு இருந்தா தான் சாத்தியம். என்னோட குறைகளோடு சேர்த்து என்னையும் கல்யாணம் ஆகி 11 வருஷம் கொஞ்சமும் சலிக்காமல் இன்னமும் இன்னும் அதிகமா காதலிக்கும் அன்பாளன்.
கலவியில் மட்டுமின்றி பொது வாழ்விலும் குடும்பம் சார்ந்த எல்லா முடிவுகளிலும் எப்போதும் சமபாதி தரும் முற்போக்கு சிந்தனையாளன். நரைக்கூடும் வயதிலும் கரம் பற்ற நீ அருகில் இருந்தால் போதும். வாழும் வாழ்க்கை சொர்க்கமே என்று ஒரு கவிதையும் பகிர்ந்து இருக்கிறார்.
சாண்டி மாஸ்டர் மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா? பிறந்த நாளில் குவியும் வாழ்த்துக்கள்
அதுபோல செந்தில் கணேஷ், நானும் உன் மீது பாசம் குறைவாக வைத்திருக்கும் ஆள் கிடையாது என்பது போல, இறைவன் தந்த வரமே என்னை உன்னை அன்றி யார் அறிவார். என்னை இந்த இனிய நாளில் உன்னை கரம் பிடித்து இன்றோடு பதினோரு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இன்னும் பல ஆண்டுகளை இதே பேரன்போடும் பெரியோர் ஆசியோடும் கடக்க இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
அந்த படத்தில் பிகினியில் நடித்ததால் நடந்த சம்பவம்! பல வருடங்களுக்கு பிறகு வருத்தத்தை பகிர்ந்த பிரியா மணி -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications