சிறகடிக்க ஆசை: ரோகிணியின் வயிற்றில் இரண்டாவது குழந்தையும், குடும்பத்தின் குழப்பமும்
சென்னை: விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடர் சிறகடிக்க ஆசையில் ரோகிணியின் இரண்டாவது கர்ப்பம் குடும்பத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சத்யாவின் பிறந்தநாளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முத்து மற்றும் மீனா இடையே சமரசமாக முடிந்தது. ஆனால்,ரோகிணி இரண்டாவது கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் மீனா பெரும் அதிர்ச்சியடைந்தார்.

இந்த விஷயத்தை ஸ்ருதியிடம் பகிர்ந்துகொண்ட மீனா மூலம் இந்த செய்தி வீடு முழுவதும் பரவி, விஜயா ரோகிணி யிடம் கடுமையாக கேள்வி கேட்கத் தொடங்கினார். ரோகிணி முதல் முறையாக கர்ப்பமானது எப்போது என்ற கேள்வியை விஜயா எழுப்பியது குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு: இந்த புரொமோவை பார்த்த ரசிகர்கள் ரோகிணி மீண்டும் பொய் சொல்லி தப்பிக்க முயற்சிப்பாரா? அல்லது மீனா மீது பழி வரப்போகிறதா? என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சிறகடிக்க ஆசை தொடரின் கதைக்களம், கதாபாத்திரங்கள் மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக, தொடரில் நடக்கும் திருப்பங்கள் மற்றும் பரபரப்பான காட்சிகள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. சிறகடிக்க ஆசை, சமீபத்திய டிஆர்பி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே தொடர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ள நிலையில், சிறகடிக்க ஆசை தொடர் கடந்த வாரத்தை விட 8.76 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.












Click it and Unblock the Notifications