Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 14ஆம் தேதிக்கான எபிசோடில், நீதிமன்றத்தில் ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மையால் விஜயாவுக்கு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது. அதே நேரத்தில் அண்ணாமலை மனோஜின் வாழ்க்கைக்கு ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடின் (Siragadikka Aasai serial April 14 , 2026 episode) ஆரம்பத்தில், நீதிமன்றத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரிடமும் விசாரணை நடக்கிறது. அப்போது இடையில் விஜயா கத்தி பேச அதனால் நீதிபதி கடுப்பாகி விஜயாவை குத்தி விடுகிறார். பிறகு ரோகிணியிடம் விசாரிக்கும் போது ரோகிணி எனக்கு வருமானமே இல்லை. நான் ஆரம்பத்தில் கல்யாணம் நடந்ததைப் பற்றி குடும்பத்தில் சொல்லாமல் பொய் சொன்னேன் உண்மைதான் ஆனால் என்னை பற்றிய எல்லா உண்மைகளையும் என் புருஷனுக்கு தெரியும்.

ரோகிணி சொன்ன வார்த்தை

அவரிடம் நான் எந்த பொய்யும் சொல்லல என்று சொல்கிறார். அதோடு என் மாமியார் என்கிட்ட இருந்து அதிகமா பணம் வாங்கி இருக்காங்க. என்னோட பார்லர் கூட அவங்களுக்காக தான் விற்று கொடுத்தேன் என்று சொன்னதும் விஜயா அதிர்ச்சியாக, பிறகு நீதிபதி இப்போதைக்கு இந்த வழக்கில் எந்த தீர்ப்பும் சொல்ல முடியாது அதனால் ஆறு மாதத்திற்கு இந்த வழக்கை தள்ளி வைக்கிறேன் அதோடு ரோகிணி எந்த வருமானமும் இல்லாமல் இருக்கிறாங்க அதனால அவங்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் மனோஜ் கொடுக்கணும் என்று சொல்லிவிடுகிறார்.

அண்ணாமலைக்கு வந்த சந்தேகம்

இதைக் கேட்டு ரோகிணி சந்தோஷப்படுகிறார். விஜயாவும் மனோஜும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அவர்கள் இருவரும் பேசும் போது இங்க நடந்த விஷயம் வீட்டுக்கு தெரிய கூடாது. அப்படி தெரிந்தால் நாளைக்கு எங்கேஜ்மென்ட் நடத்த முடியாது என்று விஜயாவும் மனோஜும் பிளான் போடுகின்றனர். பிறகு அடுத்த நாள் மனோஜ் எங்கேஜ்மென்ட்க்கு என்ன டிரஸ் போடலாம் என்று முத்துவும் மீனாவும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

மனோஜ் சொன்ன விஷயம்

அந்த நேரத்தில் அண்ணாமலை வந்து எனக்கு மனசுக்கு சரியாக படல, நீ வக்கீலுக்கு போன் பண்ணி விவாகரத்து வழக்கு என்ன ஆச்சுன்னு விசாரி என்று சொல்கிறார். அப்போதும் முத்து வக்கீலுக்கு போன் பண்ண அவர் போனை எடுக்கவில்லை. இதனால் எங்கேஜ்மென்ட்காக எல்லோரும் கிளம்பி வந்து உட்கார்ந்து இருக்கின்றனர். அந்த நேரத்தில் எங்கேஜ்மென்ட் மோதிரத்தை காணவில்லை என்று மனோஜ் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் பரபரப்பாக எல்லோரும் தேடிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+