சிறகடிக்க ஆசை: அண்ணாமலையிடம் ரோகிணி பற்றி முத்து சொன்ன விஷயம்.. அதிர்ச்சியில் மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 15 தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவும், மீனாவும் பரிசு வாங்கிட்டு வீட்டிற்கு வந்த பிறகு மனோஜ் மற்றும் ரோகிணி பற்றி சில விஷயங்களை சொல்ல அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார்.

இந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த வாரம் முழுக்க முத்து- மீனா, ரோகிணி- மனோஜ், ரவி- ஸ்ருதி எல்லோரும் கலந்து கொண்ட போட்டிகள் தான் நடைபெற்றது. போட்டிகளில் ஆரம்பத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி பேசுவதை கேட்டு எல்லோரும் பிரமித்து இருந்தாலும் கடைசியில் அவர்களுடைய சுயரூபத்தை நடுவர்கள் வெளிச்சம் போட்டு காட்டி மனோஜ் மற்றும் ரோகிணியை அவமானப்படுத்தி வெளியே அனுப்பி இருக்கின்றனர்.

Television Siragadikka aasai serial vijay tv

அதே நேரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே முத்து மற்றும் மீனாவே இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். முத்து நினைத்தது போலவே அவருக்கு ஒரு லட்சம் பரிசு கிடைத்திருக்கிறது. ஆனால் இதை எதிர்பார்க்காத விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். மனோஜ் மற்றும் ரோகிணி தான் இந்த நிகழ்ச்சியில் ஜெயிப்பார்கள் என்று ஆசையோடு அவர்களுக்கு ஆரத்தி கரைத்து வைத்திருந்த விஜயா கடைசியில் ஏமாற்றத்தோடு இருக்கிறார்.

Television Siragadikka aasai serial vijay tv

இதுவரைக்கும் முத்து மற்றும் மீனா நல்ல புருஷன் பொண்டாட்டி இல்லை என்று ஒவ்வொரு இடத்திலும் குத்தி காட்டிக்கொண்டு இருந்த ரோகிணி மற்றும் மனோஜ்க்கு இன்று சரியான அவமானம் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் தாங்கள் ஜெயித்த பண காசோலையை முத்து மற்றும் மீனா அண்ணாமலை இடம் கொடுக்கின்றனர்.

Television Siragadikka aasai serial vijay tv

பிறகு போட்டியில் நடந்த விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த போட்டியில் புருஷன் பொண்டாட்டினா சண்டை வரணும் சண்டை வரலன்னா.. புருஷன் பொண்டாட்டி கிட்டயும், பொண்டாட்டி புருஷன் கிட்ட எதையோ மறைக்கிறார்கள் என்று அர்த்தம். ஆனால் நம்ம வீட்டில சிலர் எங்களுக்குள் சண்டையே வந்தது இல்லை என்று ஏமாற்றிக்கொண்டு திரிகிறாங்க என்று சொல்ல இதைக் கேட்டு மனோஜ் மற்றும் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர்.

Television Siragadikka aasai serial vijay tv

முத்து சொன்னதும் அண்ணாமலையும் யோசித்துப் பார்க்கிறார். இதனால் ரோகிணி மற்றும் மனோஜின் மீது குடும்பத்திற்கு சந்தேகம் வருமா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி போட்டியில் கூட சில இடங்களில் சொதப்பியிருந்தார். அதாவது பணத்தை பிளாக்மெயில் செய்கிறவர்களுக்கு கொடுக்கணும் என்று சொல்லி இருந்தார். அதற்கு பிறகு சுதாகரித்து விட்டார்.

பிறகு மனோஜ் நான் ரோகிணியிடம் எதையும் மறைத்தது கிடையாது, ரோகிணியும் என்னிடம் எதுவும் மறைத்ததே கிடையாது என்று சொல்லும் போது ரோகிணியின் முகம் மாறியது. இதனால் வீட்டில் இவர்களின் நடவடிக்கை வைத்து உண்மையை கண்டுபிடிக்க போகிறார்களா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+