Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: நான் தான் கல்யாணி, உண்மையை சொன்ன ரோகிணி.. கோபத்தில் முத்து! ஆடிப்போன விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 9ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி நான்தான் கல்யாணி என்ற உண்மையை சொல்லி இருக்கிறார். ஆனால் எதிர்பார்க்காத சில ஒரு விஷயங்கள் நடந்திருக்கிறது. அதை பார்த்து விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.

நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முத்து மீனாவை கூப்பிடுகிறார். ஆனால் மீனா வர முடியாது என்று சொல்லிக் கொண்டிருப்பதால் வேறு வழியின்றி முத்து அந்த ஷோக்கு போகும் முடிவை கைவிடுகிறார். இதை அடுத்து சந்தோசமாக வீட்டிற்கு வரும் மனோஜ் ரோகிணியை கட்டிப்பிடித்து தான் ரொம்ப ஹாப்பியாக இருப்பதாக சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

தற்போது சீர்வரிசை ஆர்டர் அதிக அளவில் வருவதாகவும் அதனால் பிசினஸ் டெவலப் ஆகி இருப்பதாகவும் மனோஜ் சொல்லிக் கொண்டிருக்கும்போது ரோகிணி இதையெல்லாம் கேட்டு சந்தோஷப்படாமல் அமைதியாகவே இருக்கிறார். பிறகு மனோஜை திரும்பி பார்த்து முறைக்கிறார். ரோகிணியின் ரியாக்ஷனை பார்த்து மனோஜ் என்னாச்சு ரோகினி என்று கேட்க, நான் ரோகிணி இல்லடா கல்யாணி என்று சொல்கிறார்.

நான் தான் கிரிஷின் அம்மா கல்யாணி என்று சொன்னதும், மனோஜ் பயந்து போய் ஓடி கொண்டிருக்கிறார். கல்யாணியின் ஆவியாக பேசிய ரோகிணி மனோஜிக்கு சில கண்டிஷனை போடுகிறார். என்னுடைய மகன் கிரிஷ் மீது நீ பாசமா நடந்து கொள்ள வேண்டும். அவன் இப்போ பசியில் இருக்கிறான் அவனுக்கு நீ தான் சாப்பாடு ஊட்டி விடணும். இல்லனா உங்க அம்மாவை கொன்னுடுவேன், உன்னுடைய பிசினஸை வளர விடாம பண்ணிடுவேன்னு சொன்னதும் மனோஜ் பயந்து போய் வருகிறார்.

அங்கு தனியாக இருந்த கிரிஷை கூப்பிட்டு சாப்பிட்டியா என்று கேட்க, அவன் இன்னும் சாப்பிடவில்லை என்றதும் மனோஜ் இட்லி ஊட்டி விடுகிறார். அதை பார்த்து குடும்பத்தினர் எல்லோரும் ஷாக் ஆகின்றனர். அப்போது அங்கு வரும் விஜயா மனோஜை பார்த்து கடுப்பாகிறார். என்னடா பண்ணிட்டு இருக்க என்று கேட்க அவன் பசியில் இருக்கிறதால அவனுக்கு இட்லி ஊட்டி விடுறேன் என்று மனோஜ் சொல்கிறார்.

எதற்காக இப்படி செய்கிறாய் என்று விஜயா கேட்கிறார். அதற்கு கோவிலில் ஒரு சாமியார் பசியில் இருக்கும் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டால் பிசினஸ் நல்லா டெவலப் ஆகும் என்று சொன்னதால் இப்படி செய்வதாக சொல்கிறார். அதைக் கேட்டு முத்து கடுப்பாகி இப்பவும் நீ பிசினஸுக்காக தான் இப்படி செய்றியா? பாசத்தால இல்லையா என்று கேட்கிறார்.

அதற்கு விஜயா, எவனோ ஏதாவது சொன்னா அதை அப்படியே நம்பிடுவியா நிறுத்துடா என்று கோபப்படுகிறார். அதற்கு மீனா, முத்து விஜயாவிடம் சண்டைக்கு போகின்றனர். ஆனாலும் விஜயா மனோஜை சாப்பாடு ஊட்டுவதை தடுக்க அதற்கு மனோஜ் நிறுத்தவில்லை. அப்போது கிரிஷ் இன்னைக்கு உங்க கூட தூங்கவா என்று கேட்க, அதற்கு மனோஜ் சம்மதம் தெரிவிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+