விஜயா சொன்ன வார்த்தையை கேட்டு அதிர்ச்சியில் அண்ணாமலை.. பதறும் மீனா.. மனோஜின் திடீர் மனமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை நான்காம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாட்டியின் பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று எல்லோரும் பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முத்து வீட்டை விட்டு வெளியே போனதை நினைத்து மீனா பதறி போய் இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் பாட்டிக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும்போது அவருக்கு சின்ன வயசில் பாட்டியின் நவரத்தின மாலை தொலைந்து போன விஷயம் ஞாபகத்திற்கு வர, அதையே வாங்கிக் கொடுக்கலாம் என்று சொன்னதும் ரோகிணியும் சூப்பர் என்று சொல்லி வாங்க கிளம்புகின்றனர்.

Television Siragadikka aasai serial

அப்போது மனோஜ் ஏற்கனவே பாட்டிக்கு வாங்கி வைத்த புடவையை எடுத்துக்க அதை ரிட்டன் பண்ணிடலாம். நவரத்தின மாலை வாங்கிட்டா புடவை எதுக்கு? பணம் மிச்சமாகும் என்று சொல்கிறார். அடுத்ததாக விஜயா அண்ணாமலையிடம் வந்து உங்க அம்மாவுக்கு என்ன கிப்ட் தர போறீங்க என்று கேட்க, அண்ணாமலை அதான் அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டாங்களே என்று சொல்ல, விஜயா அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க இருந்தாலும் நாம வாங்கி கொடுத்தா சந்தோஷப்படுவாங்க என்று சொல்ல இதைக் கேட்டு அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார்.

அதற்கு விஜயா எனக்கு அத்தை மேல அக்கறை இருக்கு என்று சொல்லிவிட்டு வெளியே வந்து பார்வதிக்கு போன் போட்டு உன் வீட்டில் பையன் ரூமில் ஒரு டிவி இருக்குல்ல அதை பேக் பண்ணி எடுத்துட்டு வா, எங்க அத்தைக்கு கிப்ட்டா கொடுத்து ஸ்பெஷல் கிப்ட் நான் வாங்கிக்கிறேன். அதுல உனக்கு பங்கு தருகிறேன் என்று பேசுகிறார். அடுத்ததாக ஸ்ருதி ரவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

Television Siragadikka aasai serial

அப்போது எனக்கு கிப்ட் எல்லாம் வேண்டாம், ஆனால் சின்ன வயசுல இருந்து நான் போட்டின்னு வந்துட்டா நான் தான் ஜெயிப்பேன்... இப்பவும் நான் தான் ஜெயிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை மீனாவிடம் முத்து பற்றி விசாரிக்க, விஜயா அவன் எங்கேயாவது குடிக்க போய் இருப்பான் நாலு காலோட வருவான் பாருங்க என்று நக்கலாக பேச, மீனா அவர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு என்று சொல்கிறார்.

Television Siragadikka aasai serial

பிறகு சீதா கொண்டு வந்து கொடுத்த போனை வைத்து மீனா பாட்டியை வீடியோ எடுக்கிறார். அடுத்து பாட்டியும் முத்து பற்றி விசாரிக்க முத்துக்கு மீனா போன் பண்ணி பார்க்க போனை முத்து எடுக்காததால் ஒருவேளை சோகத்தில் குடிக்க போயிட்டாரோ என்று மீனா சந்தேகப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Television Siragadikka aasai serial
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+