சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.‌. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் டிஆர்பி ஹிட் சீரியலான சிறகடிக்க ஆசை தற்போது அடுத்தடுத்த அதிரடி திருப்பந்தல் வந்திருக்கிறது. குறிப்பாக மனோஜ் - ரோகிணி உறவில் ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சனை ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஸ்ருதியின் வாழ்க்கையை சீரழிக்க நீத்து போடும் சதித்திட்டம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Siragadikka Aasai serial Vijay TV

ரோகிணி வீட்டுக்கு சென்ற மனோஜ்

சமீபத்திய எபிசோடில், ரோகிணிக்கு பணம் கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்கிறார் மனோஜ். வழக்கம்போல் வாசலில் நின்றபடியே பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறுகிறார்.

ஆனால் ரோகிணியோ, "வாசலில் ஏன் நிற்கிறீங்க... உள்ளே வாங்க" என்று அழைத்து செல்கிறார். வீட்டுக்குள் சென்ற மனோஜுக்கு தனது கையால் சமைத்த உணவை பரிமாறுகிறார் ரோகிணி.

வேறு வழியின்றி மனோஜும் அமர்ந்து சாப்பிடுகிறார். அப்போது மனம் உடைந்து பேசும் ரோகிணி, "நான் இப்படி நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. உங்க அம்மா என்னை அவமானப்படுத்திய நாளிலிருந்து இன்னும் அதிலிருந்து வெளியே வர முடியல" என்று உருக்கமாக கூறுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

அதிர்ச்சி கொடுத்த ரோகிணி

அதன்பிறகு எதிர்பாராத வகையில் மனோஜிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார் ரோகிணி. "நாம இருவரும் தனியாக ஒரு வீடு எடுத்துக்கிட்டு சந்தோஷமா வாழலாம்" என்று சொல்கிறார்.

ஆனால் மனோஜோ அதற்கு சம்மதிக்காமல், "அம்மா இதை ஏற்க மாட்டாங்க. நீ எனக்கு டைவர்ஸ் கொடுத்துடு" என்று நேரடியாக கேட்கிறார். மனோஜின் இந்த பேச்சு ரோகிணிக்கு பெரிய அதிர்ச்சியாக அமைகிறது.

Siragadikka Aasai serial Vijay TV

டைவர்ஸ்க்கு 5 லட்சம் ரூபாய் டீல்

ஆனால் அதற்கு ரோகிணி உடனே சம்மதிக்கவில்லை. "உன்னை ஜெயிலில் இருந்து வெளியே எடுக்க நான் 5 லட்சம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். அந்த பணத்துக்காக இன்னும் வட்டி கட்டிக்கிட்டு இருக்கேன். அந்த 5 லட்சத்தை திருப்பி கொடுத்தா உடனே டைவர்ஸ் கொடுத்திடுறேன்" என்று அதிரடி நிபந்தனை விதிக்கிறார்.

இதைக் கேட்ட மனோஜ் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாலும், இறுதியில் அதற்கும் ஓகே சொல்லிவிடுகிறார். இதனால் மனோஜ் - ரோகிணி உறவு உண்மையிலேயே முடிவுக்கு வரப்போகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நீத்து போடும் கொடூர பிளான்

இதேநேரத்தில் மற்றொரு பக்கம் இன்னும் ஆபத்தான சம்பவம் அரங்கேறுகிறது. ஒரு ரெஸ்டாரண்டில் காத்திருக்கும் நீத்து, ஸ்ருதியின் முன்னாள் காதலனான பிஜுவை சந்திக்கிறார்.

ஸ்ருதியை ஒருதலைப்பட்சமாக காதலித்த பிஜு, காதலை ஏற்க மறுத்ததால் ஆசிட் வீசும் அளவுக்கு சென்றவர். அதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்திருக்கிறார். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பிஜுவை சந்திக்கும் நீத்து, அவரிடம் ஒரு அதிர்ச்சி டீல் போடுகிறார்.

மோசமான பிளான்

"நான் சொல்றதை நீ செஞ்சா ஸ்ருதி உனக்கு கிடைப்பா. ஸ்ருதி உனக்கு கிடைச்சா ரவி என்கிட்ட வந்துருவான்" என்று கூறி பிஜுவின் பழைய காதலை மீண்டும் தூண்டுகிறார். அதோடு நிற்காமல், "ஸ்ருதியின் உயிர் மாதிரி இருக்கும் ரெஸ்டாரண்டை எப்படியாவது மூடணும்" என்று திட்டமிடுகிறார். இதற்கு பிஜுவும் உடனடியாக சம்மதம் தெரிவிக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

ஸ்ருதிக்கு காத்திருக்கும் ஆபத்து என்ன?

ஏற்கனவே மோசமான பின்னணி கொண்ட பிஜு மீண்டும் ஸ்ருதியின் வாழ்க்கைக்குள் நுழைந்திருப்பது ரசிகர்களை பதற வைத்துள்ளது. நீத்து மற்றும் பிஜு சேர்ந்து தீட்டும் திட்டம் வெற்றி பெறுமா? ஸ்ருதியின் ரெஸ்டாரண்ட் உண்மையிலேயே மூடப்படுமா?

ரவி - ஸ்ருதி உறவில் மீண்டும் புயல் வீசப்போகிறதா? மனோஜ் உண்மையிலேயே ரோகிணிக்கு 5 லட்சம் கொடுத்து டைவர்ஸ் வாங்கப்போகிறாரா? என்ற பல கேள்விகளுடன் சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார எபிசோடுகளுக்கான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஒருபுறம் டைவர்ஸ் டிராமா... மறுபுறம் பழிவாங்கும் சதி... இன்னொரு புறம் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடிய முன்னாள் காதலன் என, சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது முழுக்க முழுக்க பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+