சிறகடிக்க ஆசையில் டுவிஸ்ட்.. அருண் பற்றி முத்துக்கு தெரிய வந்த உண்மை.. கதறி அழும் சீதா.. மீனாக்கு தான் பிரச்சனையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சீதா மற்றும் அருண் கல்யாணம் நடக்கும் கடைசி நேரத்தில் அருண் பற்றி முத்துவிற்கு முக்கியமான விஷயம் தெரிய வருகிறது. இதனால் முத்து கல்யாணத்தை நிறுத்துகிறார். என்ன நடக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் எதிர்பாராத பெரிய சம்பவங்கள் நடக்கப்போகிறது. சீதா மற்றும் அருண் கல்யாணத்திற்கு ஆரம்பத்தில் இருந்து சம்மதிக்காமல் இருந்ததால் மூன்று வாரங்களுக்கு மேலாக இந்த பிரச்சனை ஜவ்வாக இழுத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முத்து ஒரு வழியாக சீதா மற்றும் அருண் கல்யாணத்திற்கு சம்மதித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பு மீனா சீதா மற்றும் அருணுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்திருந்தார். இந்த உண்மை குடும்பத்திற்கு தெரியாது.

Siragadikka aasai serial vijay tv

அதற்குள் முத்து மனம் மாறிவிட்டதால் சீதா மற்றும் அருண் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்துகிறார். சீதா கல்யாணத்திற்கு அண்ணாமலை குடும்பத்தில் எல்லோரும் உதவி செய்கின்றனர். இந்த நிலையில் அடுத்த வார்த்தைக்கு என்று வெளியான ப்ரோமோவில் அருணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்ற உண்மை தெரிய வருகிறது. இதனால் கோபமான முத்து மனமேடையில் இருக்கும் அருணை சட்டையை பிடித்து எழுப்பி கீழே இழுத்து வருகிறார்.

இவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சாம். நம்ம கிட்ட ஏமாத்திட்டு இருந்திருக்கிறான் என்று சொல்லவும், அதற்கு அருண் ஆமா எனக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சிடுச்சி. இது இரண்டாவது கல்யாணம் தான். ஆனா சீதாவுடன் தான் எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சொன்னதும் சீதா அழுது கொண்டிருக்கிறார். இதனால் சீதா அருண் கல்யாணத்தை மீனா தான் முத்துக்கு தெரியாமல் நடத்தி வைத்தார் என்ற உண்மை முத்துக்கு வரும்போது முத்து பயங்கரமாக கோபப்படுவார்.

இத்தனை விஷயங்களையும் எனக்கு தெரியாமலே பண்ணியிருக்க என்று கோபப்பட்டு மீனாவை வீட்டை விட்டு துரத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே விஜயா ஓடிப் போய் கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று சொன்னதற்கு கூட அண்ணாமலை சீதா அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது, குடும்பமானதை காப்பாத்துற பொண்ணு அதனால அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டா என்று பேசி இருந்தார். இதனால் சீதா செய்த வேலை இப்போது குடும்பத்திற்கு தெரிய வரும்போது எல்லோருமே எதிராகத்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ அடுத்த வாரம் பெரிய பஞ்சாயத்து வரப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+