சிறகடிக்க ஆசை: விஜயாவை மிரட்டிய முத்து.. அண்ணாமலைக்கு வந்த சந்தேகம்! ஏமாந்த ரோகிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 14ஆம் தேதிக்கான எபிசோடில் மீண்டும் விஜயா வீட்டிற்கே வருகிறார். அதே நேரத்தில் விஜயாவின் நடவடிக்கையை வைத்து அண்ணாமலை மற்றும் ரவி எல்லோரும் சந்தேகப்படுகின்றனர்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா தன்னுடைய குடும்பத்தோடு பார்வதி வீட்டிற்கு வருகிறார். அப்போது கையில் இருந்த பண பேக்கை வீட்டிற்குள் வைத்து விட்டு எதுவும் தெரியாதது போல கோபமாக இருப்பது போன்று நடிக்கிறார். அப்போது சத்யாவின் அம்மா சத்யா செய்த தப்புக்காக மன்னிப்பு கேட்கிறார். அதுபோல சத்யாவும் விஜயாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

ஆனால் விஜயா மன்னிப்பு கொடுக்காமல் பிகு செய்து கொண்டிருக்கிறார். பிறகு முத்து எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு விஜயாவை நீங்களும் வீட்டுக்கு வாங்க என்று சொல்ல, அதற்கு விஜயா நான் வர முடியாது என்று திமிராக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து அப்பா ஊருக்கு கிளம்பிட்டாரு.. அவரோட ஃப்ரெண்டு மனைவி இப்படித்தான் அவரை விட்டுட்டு கோபப்பட்டு தனியாக இருந்தாங்க.

அவர் எவ்வளவோ சமாதானம் செஞ்சும் அவங்க மீண்டும் வீட்டிற்கு வரல அதனால கடைசில அவர் டைவர்ஸ் பண்ணிட்டாரு. அப்பாவுக்கு அந்த எண்ணம் வந்துருமோன்னு பயமா இருக்கு என்று சொல்லிவிட்டு போகிறார். இதனால் விஜயா முத்து போனதும் பார்வதியிடம் தன்னுடைய வாழ்க்கையை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

என் புருஷனும் என்னை விட்டுட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணிப்பாரா? என்று கேட்டுக் கொண்டே சரி நான் வீட்டுக்கு போறேன் என்று கிளம்பி செல்கிறார். அடுத்ததாக விஜயா வீட்டிற்கு வந்ததும் வாசலில் நிற்குமாறு முத்து சொல்கிறார். பிறகு மீனா ஆரத்தி எடுத்து விஜயாவை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். (இதை பார்க்கும் ரசிகர்களுக்கு இன்று கடுப்பாகதான் இருக்கும். காரணம் மீனா எவ்வளவு அவமானப்பட்டாலும் திருந்தாமல் இப்படி நடந்து கொள்கிறாரே என்பது பலருடைய மனதில் உதிக்கும் கேள்வியாக இருக்கும்‌).

television siragadikka aasai serial vijay tv

அடுத்ததாக அண்ணாமலை நான் சொல்லி கேட்காத நீ சத்யாவின் கேசை எப்படி வாபஸ் வாங்குன என்று கேட்க, மீனாவின் மொத்த குடும்பமும் வந்து மன்னிப்பு கேட்டதால் மனம் மாறினேன் என்று சொல்கிறார். அதற்கு ரவி நீங்க அதற்கு முன்பே கேஸை வாபஸ் வாங்கிட்டீங்களே என்று கேட்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு அப்பா சொன்னதை யோசித்துப் பார்த்தேன் என்று பிளேட்டை மாற்றி விடுகிறார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரோகிணி மீண்டும் இப்படி வந்துட்டாங்களே என்று யோசித்து கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+