அண்ணாமலைக்காக மீனா எடுத்த முடிவு.. ரோகினியின் பாடு திண்டாட்டம்.. வீட்டிற்குள் நடக்கும் அடுத்த போர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 2ஆம் தேதியில் இருந்து நான்காம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அண்ணாமலை நான் மருந்து சாப்பிட வேண்டும் என்றால் மீனா மீண்டும் இந்த வீட்டிற்கு வர வேண்டும் என்று ஸ்ட்ரைக் பண்ணுகிறார்.

இதனால் முத்து வேறு வழியில்லாமல் மீனாவை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அப்போது மீனா புது கண்டிஷன் போடுகிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சில வாரங்களாக எதிர்நீச்சல் சீரியல் அதே 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியல் மூன்றாவது இடத்திற்கு போயிருந்தது.
இந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் தன்னுடைய முதல் இடத்திற்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்களும் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் ரவி ஸ்ருதியின் திடீர் திருமணத்தால் வீட்டில் பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது. அதுபோல இன்னொரு பக்கத்தில் மனோஜ் வேலைக்கே போகாமல் தான் வேலைக்கு போய்க் கொண்டிருப்பதாக வீட்டில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இனி அந்த உண்மை எப்போது தெரியும் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதுபோல ரோகினிக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது என்ற உண்மையையும் அவர் பணக்கார வீட்டு மகள் இல்லை என்பதும் விஜயாவுக்கு தெரிய வரும்போது என்ன மாதிரி நிலைமை மாறும் என்றும், அதுபோல மீனாவின் தம்பி தான் விஜயாவிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை பிடுங்கிக் கொண்டு ஓடியது என்ற உண்மையும் தெரிய வரும்போது அடுத்து என்ன பிரச்சனை நடக்கும் என்பது பற்றியும் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இப்போது ரவியின் திருமணத்திற்கு மீனாதான் காரணம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கும் முத்து மீனா இந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று மீனாவை வீட்டை விட்டு அனுப்பி இருந்தார். அப்போது மீனாவும் இனி நீங்களா கூப்பிடற வரைக்கும் நான் இந்த வீட்டுக்குள் வரமாட்டேன். நான் தேடி வரும்போது நீங்க என்னை அவமானப்படுத்தினீங்க.
இனி நீங்க என்னை தேடி வரும் போது நான் இருக்க மாட்டேன் என்று வசனம் பேசிவிட்டு வீட்டை விட்டு கிளம்பி போயிருந்தார். அதற்கு பிறகு முத்து குடித்துவிட்டு வீட்டில் வந்து செய்த செயலால் அண்ணாமலைக்கு நெஞ்சுவலி வந்து பல போராட்டத்திற்கு பிறகு அவர் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்திருக்கிறது. இந்த நிலையில் புதியதாக வெளியான ப்ரோமோவில் அண்ணாமலையை வீட்டிற்கு கூட்டிட்டு வருகின்றனர்.
அப்போது வீட்டிற்கு வந்ததுமே மீனாவை எங்கே என்று அண்ணாமலை கேட்க அதற்கு முத்து நீங்க மாத்திரை போடுங்க அவ வருவா என்று சொல்ல, அதற்கு மீனா வராம நான் மாத்திரை போடவும் மாட்டேன், சாப்பிடவும் மாட்டேன் என்று அண்ணாமலை சொல்ல அதனால் முத்து நீங்க மாத்திரை போடுங்க நான் இப்ப கூட்டிட்டு வரேன் என்று சொல்லி மீனா வீட்டிற்கு வருகிறார்.
அங்கு மீனாவிடம் என்ன பாத்துகிட்டு இருக்கே வா போகலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு மீனா எங்க என்று கேட்கிறார். இவ வருவாளா மாட்டாளா அங்கே எங்க அப்பா மாத்திரை சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்கிறாரு. எங்க அப்பாவுக்காக தான் நான் இப்போ இங்க வந்து இருக்கேன் என்று சொல்கிறார். அதற்கு மீனா நான் வரேன் ஆனா உங்களுக்காக இல்ல மாமாவுக்காக வரேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.
வீட்டு வாசலில் நின்றபடி அண்ணாமலையை கண்கலங்க பார்க்கிறார் இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்து இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே வீட்டு பத்திரத்தை காணவில்லை என்று முத்து தேடிக் கொண்டிருந்ததால் அதை ஒருவேளை வழக்கம்போல மனோஜ் திருடிக் கொண்டு போய் இருந்தால் இனி அதை வைத்து ஒரு பிரச்சனை நடக்கும். அப்படி மட்டும் நடந்திருந்தால் விஜயா மற்றும் ரோகினியின் பாடு திண்டாட்டம் தான். ஆனாலும் என்ன ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள் என்று வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.












Click it and Unblock the Notifications