சிறகடிக்க ஆசை: வாக்கு கொடுத்து சிக்கும் அண்ணாமலை.. அண்ணன், தம்பியால் பிரச்சனையில் மாட்டும் முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 13ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

இதில் அண்ணாமலை இடம் ஸ்ருதியின் அப்பா இனி உங்க பையன் என் பொண்ணு கிட்ட பேசக்கூடாது என்று வாக்குவாதம் செய்ய, அதற்கு அண்ணாமலை அவரிடம் என் பையன் என் பேச்சை தட்ட மாட்டான் என்று வாக்கு கொடுக்கிறார்.

siragadikka aasai serial October 13th promo and Episode Highlights

அதுபோல வேலைக்கே போகாமல் வீட்டில் சம்பளத்தை கொடுக்க வேண்டுமே என்று மனோஜ் புதியதாக பிரச்சனை ஒன்றில் மாட்டுகிறார். இந்த வழியில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் மனோஜ் முத்துவிடமிருந்து தப்பிப்பதற்காக பிச்சைக்காரன் போல வேஷம் போட்டு அமர்ந்திருக்க, அதை நிஜ பிச்சைக்காரன் என்று நினைத்த முத்து அவருக்கு ஐந்து ரூபாயை போட்டுவிட்டு கிளம்ப பிறகு மனோஜ் இன்னைக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்று யோசித்து கொண்டிருக்கும்போது பார்க்கில் தன்னோடு அறிமுகமான நண்பரிடம் கடன் கேட்கிறார்.

அதற்கு அந்த நபர் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு மனோஜை போட்டோ எடுத்துக்கொண்டு அவருடைய ஆதார் கார்டையும் வாங்கி வைத்துக்கொண்டு அவருக்கு இருபதாயிரம் ரூபாய் கொடுக்கிறார். பிறகு ஸ்ருதி வீட்டிற்கு வந்ததும் தான் பிஜூவை திருமணம் செய்ய சம்மதம் என்று சொல்லி டிராமா போட்டு ரூமிற்கு சென்று ரவியோடு போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அவருடைய அம்மா ஸ்ருதி பிஜூ கூட தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று ஸ்ருதி சொன்னதை நம்பி விடுகிறார்.

அதைத்தொடர்ந்து கொஞ்ச நேரத்திற்குள் வீட்டிற்குள் பிஜு வர, ஸ்ருதி போனில் பேசிக் கொண்டிருப்பதை பிஜூவுடன் இல்லை என்பதை ஸ்ருதியின் அம்மா புரிந்து கொண்டு ஸ்ருதியை அறைக்குள் அடைத்து வைத்து விடுகிறார். ஆனாலும் அசராத ஸ்ருதி தன்னிடம் இருக்கும் இன்னொரு ஃபோனில் ரவிக்கு போன் பண்ணி தன்னை வீட்டிற்குள் அடைத்து வைத்திருப்பதைப் பற்றி சொல்லி, சீக்கிரமாக நாம் கல்யாணம் பண்ண வேண்டும். அதற்கான ஏற்பாடு பண்ணு என்று சொல்ல ரவியும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.

அதைத்தொடர்ந்து ஸ்ருதி அப்பா பார்கில் அண்ணாமலையை சந்தித்து பேசுகிறார். அப்போது ரவியை என் மகளுடன் பேச வேண்டாம் என்று சொல்லுங்க. உங்க பையனை கண்டிச்சு வைங்க என்று அவர் சொல்ல, அதற்கு அண்ணாமலை அதை உங்க பொண்ணு கிட்ட சொல்லுங்க என்று பதிலடி கொடுக்கிறார்.

அதற்கு என் பொண்ணு என் பேச்சைக் கேட்க மாட்டா என்று அவர் சொல்ல, அதற்கு அண்ணாமலை நான் என் பையனை அப்படி வளர்க்கல என்று வீராப்பாக பேசிவிட்டு என் பேச்சை என் பையன் கண்டிப்பாக கேட்பான் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+