சிறகடிக்க ஆசை: ரோகிணி போட்ட பிளான்! சீதாவிடம் கோபத்தை காட்டும் அருண்! முத்து கொடுத்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'சிறகடிக்க ஆசை' சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவின் குடும்பத்திற்கு பணம் கொடுக்க அருண் கோபமடைகிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணியும் கிரிஷும்

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் ரோகிணி மற்றும் கிரிஷ் தங்கியிருந்த வீட்டிற்குச் செல்கிறார்கள். அங்கு வீட்டின் உரிமையாளர் அவர்கள் அட்வான்ஸ் பணத்தை வாங்கிவிட்டு சென்றுவிட்டதாக கூறுகிறார். அவர்கள் அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றிருப்பதாக சொல்ல முத்துவும் மீனாவும் அவர்களை தேடி அந்த ஹோட்டலுக்கு செல்கிறார்கள். ஆனால் வழியில் ஒரு ஆட்டோக்காரர் மற்றும் டூ வீலர் காரர் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க முத்துவால் போக முடியாமல் இருக்கிறது. முத்து இறங்கி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க அதற்குள் ரோகிணி கிரிஷை சாப்பிட்டு ஆட்டோவில் ஏற்றி கிளம்பி விடுகிறார்.

ஸ்ருதியின் பிசினஸ்

ஸ்ருதி தனது புதிய ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவுக்கு அண்ணாமலை விஜயா மனோஜ் மற்றும் ரோகிணியை அழைத்து பத்திரிகை கொடுக்கிறார். மனோஜிடம் தனது ஹோட்டலுக்கு 'பிரிட்ஜ்' 'டிவி' எல்லாம் வேண்டும் என்றும், ஆனால் தனக்கு எந்தவித லாபமும் இல்லாமல் அந்த பொருட்களை மனோஜ் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு பதிலாக மனோஜ் எப்போது வந்தாலும் தனது ஹோட்டலில் இலவசமாக சாப்பிடலாம் என்றும் கூறுகிறார். ஆனால் மீனாவிடம் டெக்கரேஷன் பண்ண எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொல்கிறார்.

மனோஜ் கோபம்

இதை கவனித்த மனோஜ் "எங்களிடம் லாபம் பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மீனாவிடம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொல்கிறார்கள்" என்று கோபமாக சொல்கிறார். அதற்கு விஜயா எனக்கு மீனா மாதிரி நடிக்க தெரியாது என்று சொல்லிவிட்டு கோபமாக கதவை சாத்துகிறார். பிறகு ரவி ஒத்துக்கிட்டானே மிஞ்சி போயிட்டு அதற்கு சொல்லி இல்ல ஆனா கண்டிப்பா வரவச்சிடுவேன் என்று சொல்கிற பிறகே எல்லாரும் போனதும் மீனாவை முற்றிலும் பேசி கொண்டு இருக்கின்ற நேரத்தில் வாங்கணும என்று சொல்கிறார் என்று முற்றுகை சொல்கிறார்.

அருணின் கோபம்

அடுத்ததாக மீனாவுக்கு சீதா போன் பண்ணி நீ நாளைக்கு எப்ப வர என்று கேட்க எனக்கு ரெண்டு மூணு ஆடு இருக்கு நான் வரல ஆனா உங்களை அனுப்பி வைக்க வரேன் என்று சொல்கிறார் பிறகு சீதா செய்த விஷயத்தை முத்துவிடம் சொல்கிறார். மீனா தனது சகோதரி சீதாவை கும்பகோணம் பயணம் அனுப்புவதற்கு அவரிடம் பணம் இல்லை என்று சொல்ல முத்து "தன்னிடம் இருக்கும் ₹2,000 பணத்தை அத்தை சீதாவிடம் கொடுத்துவிடு" என்று சொல்கிறார். "அவர் புது மாப்பிள்ளை அருண் உடன் போவதால் அவரிடம் செலவுக்கு பணம் கேட்க சங்கடப்படுவார்" என்றும் முத்து கூறுகிறார். மறுநாள் மீனா சீதாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அருணிடம் பணத்தைக் கொடுத்து "உங்க மருமகன் இந்த பணத்தை கொடுத்தார்" என்று சொல்கிறார். அதை கேட்ட அருண் கோபமாகி "என்ன நீங்க என்னை அவமானப்படுத்துகிறீர்களா? எனது அத்தையை நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?" என்று கேட்டு கோபப்படுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+