சிறகடிக்க ஆசை சீரியல் நாளைய அப்டேட்: ரோகிணி போட்ட நாடகத்தால் தெருவுக்கு வரும் மனோஜ்.. உடையும் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ்க்கு அமெரிக்க பெண்ணுடன் எங்கேஜ்மென்ட் நடந்த விஷயம் ரோகிணிக்கு தெரிய வந்திருக்கிறது. இதை வைத்து இப்போது ரோகிணி புது ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai Vijay TV Tamil Serial Rohini Manoj Serial Update Tamil News TV Show Drama

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ

சிறகடிக்க ஆசை சீரியலில் சில வாரங்களாகவே கதை பெரிதாக சுவாரசியம் இல்லாமல் ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்தது. இப்போது புதிய பிரச்சனைகள் வர தொடங்கி இருக்கிறது. அதாவது ஒரு பக்கம் சிந்தாமணியின் மகளைத்தான் சத்தியா காதலிக்கிறார் என்ற உண்மை முத்து மீனாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதேபோல இந்த காதல் பிரச்சனை சிந்தாமணிக்கும் தெரிந்திருக்கிறது.

Siragadikka Aasai Vijay TV Tamil Serial Rohini Manoj Serial Update Tamil News TV Show Drama

சிந்தாமணியின் ஆட்டம்

சிந்தாமணி இதுவரைக்கும் தன்னுடைய கணவருடன் பிரிந்து இருந்தாலும் இப்போது இந்த பிரச்சனையை பற்றி தன்னுடைய கணவரிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார். அதிலும் சத்யா ஆரம்பத்தில் செய்த திருட்டு வேலைகள் எல்லாவற்றையும் இப்போது சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதனால் சிந்தாமணியின் கணவர் சத்யாவை வேலையை விட்டு துரத்துவாரா? அல்லது தன்னுடைய மகளை கல்யாணம் செய்து கொடுப்பாரா? என்று கேள்விகள் ஒரு பக்கம் இருக்கிறது.

Siragadikka Aasai Vijay TV Tamil Serial Rohini Manoj Serial Update Tamil News TV Show Drama

சத்யாவின் காதல் பிரச்சனை

இன்னொரு பக்கத்தில் மனோஜிக்கு விவாகரத்து நடப்பதற்கு முன்பே அமெரிக்கா பெண்ணுடன் என்கேஜ்மென்ட் நடந்திருக்கிறது. விவாகரத்து இன்னும் ஆறு மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கும் விஷயத்தை விஜயாவும் மனோஜும் வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கின்றனர். இதற்கு இடையில் இன்றைய எபிசோடில் மனோஜ்க்கு எங்கேஜ்மென்ட் செய்த ஹரிணி ரோட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு உதவி செய்வது போல பேசிய ரோகிணியை அவர் உண்மையாக நம்பிவிடுகிறார்.

Siragadikka Aasai Vijay TV Tamil Serial Rohini Manoj Serial Update Tamil News TV Show Drama

ரோகிணியின் நாடகம்

மேலும் ரோகிணி தன்னுடைய பார்லர் அட்ரஸை கொடுத்திருக்கிறார். இப்படியான நிலையில் நாளைக்கான ப்ரோமோவில் ரோகிணியின் பார்லருக்கு ஹரிணி போய் இருக்கிறார். ஹரிணியை பார்த்ததும் அவருக்கு மேக்கப் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஃபோனை காட்டி இதில் பத்து முப்பதாகிறது இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு எல்லாம் ஓகே ஆகிவிடும் என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் ரோகிணியுடன் மனோஜ் சேர்ந்து எடுத்த போட்டோவை டிபியில் வைத்து அதை ஹரிணியிடம் ரோகிணி காட்ட, அதை பார்த்து ஹரிணி அதிர்ச்சி அடைந்து இவங்க உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, அதற்கு ரோகிணி இவர்தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு என்னுடைய ஹஸ்பண்ட் என்று சொல்கிறார்.

Siragadikka Aasai Vijay TV Tamil Serial Rohini Manoj Serial Update Tamil News TV Show Drama

அடுத்து என்ன நடக்கும்

இதை கேட்டு ஹரிணி அதிர்ச்சியாகி இவருடன் தான் எனக்கு எங்கேஜ்மென்ட் முடிந்து இருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்டதும் ரோகிணி கதறி அழுவது போல நாடகம் போடுகிறார். இதனால் இது உண்மை என்று நம்பும் ஹரிணி மனோஜை அசிங்கப்படுத்திவிட்டு போகப் போகிறாரா? அல்லது இதையும் மீறி இவர்களுக்கு கல்யாணம் நடக்கப் போகிறதா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+