சிறகடிக்க ஆசை: ஒரே வார்த்தையில் ரோகிணிக்கு ஆப்பு வைத்த விஜயா.. ரசிகர்கள் நினைத்தது நடந்தது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி விஜயாவிடம் வசமாக சிக்கி இருக்கிறார். மலேசியாவிற்கு போக வேண்டும் என்று விஜயா சொன்னதை கேட்டு ரோகிணி அதிர்ச்சியாக இருக்கிறார். சிறகடிக்க ஆசை சீரியலில் ஆரம்பத்தில் இருந்து ரோகிணி மட்டும் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கு ஒவ்வொரு வாரம் ஒரு பிரச்சனை வந்தாலும் அதை அப்படியே விஜயா பக்கமும் மனோஜ் பக்கமும் திருப்பி விட்டு விடுகிறார்.
அதிகமான நேரங்களில் முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. முத்து மீனாவும் இந்த சீரியலின் கதாநாயகனா அல்லது அவர்கள் தான் இந்த சீரியலில் காமெடி பீசா என்று தெரியவில்லை. மீனா அநியாயத்திற்கும் மாமியார் புராணம் பாடிக்கொண்டிருக்கிறார்.

எந்த பிரச்சனை தனக்கு வந்தாலும் ஐயோ இந்தப் பிரச்சனை வீட்டிற்கு தெரிந்தால் மாமா என்ன செய்வார்? மாமாவுக்கு எதுவும் ஆகிவிடும், அத்தை வீட்டை விட்டு போய்விடுவார் என்று மீனா சொன்ன வார்த்தையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோடில் கூட மீனா மீது விஜயா திருட்டுபழி போட்டு இருக்கிறார்.
ஆனால் விஜயா சத்யாவின் கேசை வாபஸ் வாங்குவதற்காக பணம் வாங்கிய விஷயத்தை முத்து கண்டுபிடித்திருக்கிறார். இந்த உண்மையை மொத்த குடும்பத்தின் முன்பு முத்து சொல்லும் போது கூட மீனா அத்தை இந்த உண்மை எனக்கு தெரிஞ்சிருந்தா நான் இதை வீட்டில் வந்து சொல்லி இருக்கவே மாட்டேன் என்று வீர வசனம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது பார்க்கும் ரசிகர்களை இவங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று புலம்ப வைக்கிறது. அதோடு இந்த மீனா எப்போதான் திருந்துவார் என்பது பலருடைய கேள்வியாகவும் இருக்கிறது. அதுபோல ரெண்டு லட்சம் பணத்தை திருடியது ரோகிணித்தான். வழக்கம் போல இந்த முறையும் ரோகிணி தப்பித்துவிட்டார்.
இது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது அந்த ப்ரோமோவில் மீனா மற்றும் முத்துவிற்கு விஜயாவால் 5 லட்சம் கடன் வந்துவிட்டது என்பதற்காக அந்த அஞ்சு லட்சத்தையும் விஜயா தான் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்கிறார்.

இல்லை என்றால் மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் விஜயா பணம் கொடுக்கிறேன் என்று சொல்லி விடுகிறார். அப்போது மனோஜ் விஜயாவிடம் நீங்க ஏன் அம்மா பணம் கொடுக்கிறேன் என்று சம்மதிச்சீங்க? இந்த முத்துவும் அப்பாவும் இப்படித்தான் சொல்லுவாங்க பிறகு அப்படியே விட்டுவிடுவார்கள் என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா நான் அந்த பூக்காரி கிட்ட கடன்காரியா இருக்க விரும்பல. அதனால நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு மனோஜ் என்ன முடிவு என்று கேட்டதும், நீ உடனே மலேசியாவுக்கு டிக்கெட் போடு நாம அங்க போகணும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ரோகிணி என்னது மலேசியாவிற்கா என்று அதிர்ச்சியாகிறார். வழக்கம் போல இந்த முறையும் ரோகிணி தப்பித்து விடுவாரா? அல்லது இந்த முறை சிக்க போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications