சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன முத்து.. விஜயாவுக்கு பெரிய ஏமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சத்யாவின் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதற்கு விஜயா சம்மதித்து விட்டார் என்று சொன்னதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு வழியாக மக்கள் எதிர்பார்த்தபடியே கதை பயணிக்க தொடங்கி இருக்கிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் ரோகிணிக்கு மட்டும் எந்த பிரச்சனையும் பெரியதாக வராமல் அவர் தப்பித்துக் கொண்டே இருந்தார். இதனால் இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது.

ஒவ்வொரு முறையும் முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. சமீபத்தில் கூட சத்யா திருடிய வீடியோவை முத்து செல்போனில் சேவ் பண்ணி வைத்திருந்த நிலையில் அதை ரோகிணியின் உதவியோடு சிட்டி லீக் செய்து இருக்கிறார். இதனால் மீனாவின் குடும்பத்தினர் பிரச்சனையில் இருக்கிறார்கள்.
சத்யா பற்றிய உண்மைகள் தெரிய வந்ததும் சத்யா மீது விஜயா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். முத்துவும் மீனாவும் அந்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்குவதற்காக எவ்வளவோ கெஞ்சி பார்க்கின்றனர். ஆனால் விஜயா சம்மதிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் வக்கீல் நீங்கள் அஞ்சு லட்சம் கொடுத்தால் நாங்கள் இந்த கேஸை முடிச்சு தருகிறோம் என்று பேசி இருக்கிறார்கள்.

முத்து இன்று பல இடங்களில் கஷ்டப்பட்டு பணத்தை வக்கீலிடம் கொடுத்திருக்கிறார். அதை வைத்து வக்கீல் விஜயாவிடம் டீல் பேசுகின்றனர். இறுதியாக விஜயா 2 லட்சம் ரூபாய் தரோம் என்று சொன்னதும் கேஸை வாபஸ் வாங்க சம்மதம் சொல்லி விடுகிறார். இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் முத்து வீட்டிற்கு வந்து சந்தோஷமாக அப்பா, அம்மா கேஸை வாபஸ் வாங்க சம்மதம் சொல்லிட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மனோஜும் ரோகிணியும் ரூமிற்குள் இருந்து வந்து எதற்காக இப்படி கத்திக்கிட்டு இருக்கிற.. நாங்க அம்மா வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்களே என்று கோபமா இருக்கிறோம். நீ என்னன்னா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிற என்று சொன்னது நானும் அம்மா விஷயத்தை வச்சு தான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று முத்து சொல்கிறார்.

என்ன சொல்ற என்று மனோஜ் கேட்டதும், அம்மா சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்க சம்மதம் சொல்லிட்டாங்க என்று சொன்னதும் ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். விஜயா இனி கேஸை வாபஸ் வாங்கினால் சத்யா மீது பிரச்சனை இல்லாமல் போய்விடும் இதை வைத்து சிட்டி மீண்டும் ரோகிணியை மிரட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே சிட்டி 2 லட்சம் பணம் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதோடு சிட்டி மற்றும் பிஏவிடம் சிக்கிக் கொண்டு ரோகிணி திணற போகிறார். ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல இப்போது ரோகிணிக்கும் பிரச்சனை வர தொடங்கி விட்டது.
பழைய பிஏவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தான் சிட்டியிடம் பல லட்சம் வட்டிக்கு வாங்கி இருக்கிறார். ரோகிணி இப்போது சிட்டி 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதால் விஜயா கேஸை வாபஸ் வாங்குவதற்காக 2 லட்சம் பணம் வாங்கியதை எடுத்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் விஜயாவுக்கும் ரோகிணிக்கும் அடுத்த பிரச்சனை வெடிக்கும். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications