சிறகடிக்க ஆசை: க்ரிஷ்ஷுக்காக ரோகிணி போட்ட பகீர் திட்டம்! அடுத்து என்ன நடக்கும்?
விஜய் டி.வி-யின் பிரபலமான தொடரான 'சிறகடிக்க ஆசை'யில், மீனாவுக்குத் தெரிந்த ரகசியத்தால் ஒட்டுமொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், ரோகிணி தனது புதிய திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

க்ரிஷின் உண்மையான தாய் ரோகிணிதான் என்ற அதிர்ச்சித் தகவல் மீனாவை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த உண்மையை வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னால், தானும் தன் மகனும் தற்கொலை செய்துகொள்வோம் என ரோகிணி மிரட்டியதால், மீனா அமைதி காத்து வருகிறார்.
உண்மையை மறைக்கும் குற்றவுணர்ச்சியால் மீனா நாள்தோறும் அவதிப்படுகிறார். மறுபுறம், ரோகிணி தனது அடுத்த கட்ட திட்டங்களை வகுக்கிறார். தன்னைப் பற்றிய உண்மை வெளிவருவதற்கு முன்பாக, க்ரிஷ் தனது கணவர் மனோஜுடன் நெருங்கிப் பழகி, அவர்களுக்குள் ஒரு நல்ல உறவு உருவாக வேண்டும் என்று ரோகிணி விரும்புகிறார்.
இந்தக் குழப்பமான சூழ்நிலையில், கோபத்தின் உச்சத்தில் இருக்கும் மீனா ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். ரோகிணியின் கற்பனையான அம்மா குறித்த பேச்சால் கோபமடைந்த மீனா, "அந்தக் கற்பனை அம்மா கற்பனையிலேயே இறந்து போகலாம்" என்று கூறிவிடுகிறார்.
இதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ரோகிணி, தனது தாயாரை களமிறக்குகிறார். ரோகிணியின் தாயார் திடீரென வந்து, "க்ரிஷின் அம்மா இறந்துவிட்டார். அதனால் க்ரிஷுக்கு அடைக்கலம் இல்லை. க்ரிஷ், மீனா மற்றும் முத்துவுடன் தான் இருக்க ஆசைப்படுகிறான்" என்று நாடகமாடுகிறார்.
இதைக் கேட்ட அண்ணாமலை, "க்ரிஷ் இங்கேயே இருக்கட்டும், அவன் நம் வீட்டுப் பிள்ளை" என்று பாசத்துடன் கூறுகிறார். ரோகிணி திட்டமிட்டது போலவே அனைத்தும் கச்சிதமாக நடக்கிறது. க்ரிஷ் நிரந்தரமாக முத்து - மீனா வீட்டில் தங்குவது உறுதியாகிவிட்டது.
ரோகிணியின் சுயநல நாடகம் முழு வெற்றி பெற்றுள்ள நிலையில், க்ரிஷின் உண்மை எப்போது மனோஜிக்கு தெரியவரும்? மீனாவின் அமைதி எப்போது உடையும்? இனி என்னென்ன திருப்பங்கள் வரப்போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications