Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Azhagu Serial: பரவால்லியே... சற்றே மாற்றம் தெரியுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் சிறையில் கைதியாக இருக்கும் பூர்ணாவுக்கு ஸ்பெஷலாக பிரியாணி சாப்பாடு கொடுக்கப்படுகிறது. அவள் அம்மா வழக்கறிஞர் என்கிற செல்வாக்கில்.

அப்போது சிறை வார்டனாக இருக்கும் ஒரு பெண் போலீஸ், அதை கண்டுபிடிச்சு, கதவைத் திறக்கச் சொல்லி உள்ளே வராங்க. மற்ற கைதிகள் ஜெயில் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருக்க. பூர்ணா பிரியாணி சாப்பிட கெத்தாக உட்கார்ந்து இருக்கிறாள்.

உள்ளே வந்த வார்டன் சொல்றாங்க... இது மட்டும் சாப்பாடு இல்லாம வேற ஏதாவதா இருந்துச்சு.. அப்படியே அதை மிதிச்சு இருப்பேன். உனக்கு மட்டும் என்ன இந்த மாதிரி சலுகை எல்லாம் என்று கேட்டு, பிரியாணியை கொடுத்த போலீசிடம் இதை எடுத்துட்டு போன்னு சொல்றாங்க.

சாப்பாட்டை மிதிச்சா

சாப்பாட்டை மிதிச்சா

பெண் போலீஸ் சாப்பாட்டுக்கு எப்படி மதிப்பு தரணும்னு சொல்லி, பூர்ணாவுக்கு கொடுக்கப்பட்ட பிரியாணியை பக்குவமா எடுத்துட்டு போகச் சொல்றாங்க. சாப்பாடுன்ன வாசி அதை ஒன்னும் செய்யாம விட்டுட்டேன். வேற எதாவது நீ திருட்டுத்தனம் பண்ணி அதை இப்போ என் கண் முன்னால் பார்த்திருந்தா அதை மிதிச்சு இருப்பேன். உனக்கும் மிதி கிடைக்கும்னு சொல்றாங்க. அந்த சிறை வார்டன் சாப்பாட்டை மிதிக்கும்படி சீன் வச்சா நல்லாவா இருந்திருக்கும்?

 இதைத்தான் சொன்னோம்

இதைத்தான் சொன்னோம்

இது மாதிரி சில விஷயங்களைத்தான் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறோம். வயதான பெண்கள் கோவத்தில் பூவைத் தூக்கி வீசறாங்க. உணவுப் பொருட்களை காலால் மிதிக்கறாங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று சொல்லி இருந்தோம். என்னதான் கோவம் வந்தாலும் இப்படி பெண்கள் நடந்துக்கொள்வதில்லை என்பதை அழகு சீரியலில் போலீஸ் வார்டன் நிரூபிச்சு இருக்காங்க.

மாத்தி யோசிங்க

மாத்தி யோசிங்க

இதுக்குத்தான் காலம் காலமா இதையே பின்பற்றி சீன் எடுக்காதீங்க. மாத்தி யோசிங்கன்னு சொல்லி இருந்தோம். மாத்தி யோசிச்சா டயலாக் கிடைக்காதா இல்லை காட்சிதான் கிடைக்காதா? கற்பனைக்கா பஞ்சம்....! அழகு சீரியலின் இந்த காட்சி பயனுள்ள காட்சியாக இருந்தது. பூர்ணாவுக்கு டஃப் கொடுக்கும் சிறை வார்டனாக வருகிறார் இந்த பெண் போலீஸ்.

ஜெயிலில் பூர்ணா

ஜெயிலில் பூர்ணா

ஜெயிலில் இருக்கும் பூர்ணா, ஜெயிலுக்கு போயும் கூட திருந்தவில்லை. இன்னும் இன்னும் என்று சுதாவைப் பழிவாங்கத் திட்டம் போடுகிறாள். அழகு சீரியல் கதை எப்போது முடியுமோ அப்போது இந்த பூர்ணா திருந்துவார். அதுதானே சீரியல் தர்மம்! பூர்ணா திருந்திவிட்டால் அழகு கதைக்கு வேலை இருக்காது என்று பயணிக்கிறார்கள். அதுவரையில் பூர்ணா வில்லியாக என்ன செயல் செய்வாளோ அதை பொறுத்துப் போகத்தான் வேண்டும், சீரியல் பார்ப்பவர்கள். இதுதான் எழுதப்படாத விதி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+