சன் டிவியில் முடிவுக்கு வரும் வானத்தைப்போல சீரியல்.. காரணம் இதுதானா? வெளியான தகவல்கள்
சென்னை: சன் டிவியில் கடந்த 2020 ஆண்டில் தொடங்கப்பட்ட வானத்தைப்போல சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அண்ணன் தங்கை கதையை மையமாக கொண்ட இந்த சீரியல் வரும் வாரத்தோடு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒரு சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி விட்டாலே அது பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும். இது வழக்கமாக நடப்பது தான். அதிலும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விடும். அதனாலேயே டிஆர்பியில் டாப் 10 இடத்தில் அதிகமாக சன் டிவி சீரியல்கள் தான் இடம் பிடிக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் பல வருடங்களை கடந்த ஒரு சில சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் வானத்தைப்போல சீரியல் நான்கு வருடத்தை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தங்கை கதையை மையமாகக் கொண்டே கதை நகர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் அதிகமாக ரசிகர்கள் மத்தியில் கவர தொடங்கியது. ஆனால் இந்த சீரியலில் கதாநாயகனாக அண்ணன் கேரக்டரில் நடித்து வந்த நடிகரும் அவருடைய தங்கையாக நடித்த நடிகையையும் அடுத்தடுத்து விலகி இருந்தனர். ஆனாலும் இந்த சீரியலுக்கு டிஆர்பி குறையவில்லை. ஆனால் சமீபத்தில் இந்த சீரியலில் கதையில் தொய்வு ஏற்பட்டு இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாகவே இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் கிராமப்புறத்தில் இந்த சீரியலுக்கு இப்போதும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அண்ணன் தங்கையாக இருந்தாலும் இவர்களை இருவரும் நல்லா வாழ்ந்ததாக இந்த சீரியலில் கதையே இல்லை. எப்போதும் இவர்களுக்கு அடுத்தடுத்த பிரச்சனை மட்டும்தான் வந்து கொண்டே இருக்கிறது.

அண்ணனுக்காக தங்கையும், தங்கைக்காக அண்ணனும் மருத்துவமனையில் தான் அடிக்கடி அட்மிட் ஆகி கொண்டு இருக்கிறார்கள். அதனாலேயே இப்போது டிஆர்பியும் தொடங்கி இருக்கிறது. இதனால் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் இனி ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமடைந்த சுவாதி நடிக்கும் மூன்று முடிச்சு சீரியல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று முடிச்சு சீரியல் கிராமப்புறத்தை மையமாகக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் வானத்தைப்போல சீரியல் முடிவுக்கு வரும் செய்தி வந்ததும் ஒரு தரப்பு ரசிகர்கள் மகிழ்ச்சி என்று கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இந்த சீரியலை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி வருகின்றனர்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications