நீங்கதான் இளையராஜாவின் காப்பியா? சூப்பர் சிங்கர் சரணுக்கு யுவன் அளித்த பரிசு! மிஸ்கின் கொடுத்த கமெண்ட்
சென்னை: தமிழ் சினிமாவின் இசைக்கு என்றும் நீங்காத ஓர் அத்தியாயத்தை எழுதியவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய இசை, தலைமுறைகளைக் கடந்து இன்றும் மக்களை ஆட்கொண்டு வருகிறது. அவரது பாடல்களின் தாக்கம், மக்கள் மனதை அமைதிப்படுத்துவதிலும், மகிழ்ச்சியைக் கொடுப்பதிலும் நிகரற்றது. இத்தகைய இசைப் பேரரசரைக் கௌரவிக்கும் விதமாக, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் சிங்கர் சீனியர் 11வது சீசனில் 'Celebrating இசை' என்ற தலைப்பில், அடுத்த மூன்று எபிசோடுகள் முழுக்க முழுக்க அவரது பாடல்களைப் பாடும் சிறப்புச் சுற்றாக நடைபெறுகிறது.

இளையராஜாவின் இசை
இளையராஜா வெறும் இசையமைப்பாளர் அல்ல, அவர் தமிழர்களின் வாழ்வின் ஓர் அங்கம். காதல், சோகம், மகிழ்ச்சி, தத்துவம் என அத்தனை உணர்வுகளுக்கும் அவருடைய இசையில் ஓர் அமுது உண்டு. ஒரு தனி மனிதனின் வாழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கி, அவருக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் ஆற்றல் அவரது பாடல்களுக்கு உண்டு. எண்பதுகளில் ஆரம்பித்து இன்று வரை, அவரது பாடல்கள் மக்களின் மனதிற்கு ஒரு மாற்றத்தையும், ஆத்ம திருப்தியையும் கொடுத்து வருகின்றன. அதனால்தான், 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்கள்கூட, இன்றும் இளைஞர்களால் கொண்டாடப்படுகின்றன.
சூப்பர் சிங்கர் மேடையில் இசை வாரிசுகள்
இளையராஜாவைக் கொண்டாடும் இந்தச் சிறப்புச் சுற்றில், திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினர். இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக மேடையில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்ட்டைப் பரிசளித்து வாழ்த்தியது, அங்கிருந்த அத்தனை பேரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
வெங்கட் பிரபுவின் ஜாலியான ரகசியம்
நிகழ்ச்சியின்போது, யுவனும் வெங்கட் பிரபுவும் மேடையில் நடுவராக இருக்கும் இயக்குநர் மிஷ்கினிடம் மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசினர். வெங்கட் பிரபு, மிஷ்கினிடம், "இளையராஜா உங்களுக்கு மட்டும் அப்பா கிடையாது. எங்களுக்கும் அப்பா தான்! அவர் எல்லாருக்குமே தாய் போன்றவர்!" என்று எமோஷனலாகப் பேசியது, இளையராஜாவின் இசைத் தாக்கம் ஒட்டுமொத்தக் கலைஞர்கள் மீதும் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டியது.
இதற்குப் பிறகு, தனது பாணியில் ஜாலியாகப் பேசிய வெங்கட் பிரபு, "என்னுடைய அப்பாவின் (இளையராஜா) பாடல்களை நான் காப்பி அடித்து இருக்கிறேன். இப்போதும் அடிப்பேன்! எப்போதும் அடிப்பேன்!" என்று வெளிப்படையாகப் பேசியது, அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. யுவனும், மிஷ்கினும் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
மிஷ்கின் கேட்ட கேள்வி
இந்நிகழ்ச்சியில், தொகுப்பாளினி பிரியங்கா, வெங்கட் பிரபுவிடம் ஒரு ஜாலியான கேள்வியைக் கேட்டார். வெங்கட் பிரபுவும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றாதது குறித்துக் கேட்டபோது, வெங்கட் பிரபு அளித்த பதில் மிகவும் கலகலப்பாக இருந்தது.
வெங்கட் பிரபு, "நாம காப்பி அடிக்கிற விஷயம் எல்லாத்துக்கும் தெரியும். அதை எல்லாம் தெரிஞ்சிட்டு, இந்த நேரத்தில் அவர்கிட்ட போய், 'எனக்கு ஒரு பாட்டுக் கொடுங்க' என்று கேட்டால், அந்தப் பாடலை அவர் 'நான் எப்பவோ பண்ணிட்டேன்டா!' என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவாரு. அதனால அவர் பக்கமே போறதுக்குக் கிடையாது" என்று மிகவும் ஜாலியாகப் பதில் சொல்லிச் சமாளித்தார். வெங்கட் பிரபுவும் மிஷ்கினும் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, யுவன் சங்கர் ராஜா சிரித்துக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இளையராஜாவின் இசைப் பாரம்பரியத்தையும், அவருடைய தாக்கத்தையும் உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் கொண்டாடிய இந்தச் சிறப்புச் சுற்று, ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications