விளையாட்டு வினையானது..மாகாபா கேள்வியால் கோபத்தில் கிளம்பிய கங்கை அமரன்..சூப்பர் சிங்கரில் பரபரப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் ஜூன் 18-ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் நடுவர்களில் ஒருவராக கங்கை அமரன் கலந்து கொண்டிருக்கிறார்.
அதில் கங்கை அமரனின் பாடல்களை மாகாபா கிண்டல் செய்ததால் கோபத்தில் நான் கிளம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். அது இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் இந்த வார எபிசோடில் நடுவர்களாக பாடகி சித்ரா, பாடகர் அனந்த் வைத்தியநாதன், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்கள் கொண்ட கங்கை அமரன், பாடகர் புஷ்பவனம் குப்புசாமி போன்றோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதுபோல இந்த வார தொகுப்பாளராக மாகாபா மற்றும் குரோஸி கலந்து கொண்டிருக்கின்றனர். இதுவரைக்கும் தொகுப்பாளராக இருந்த பிரியங்கா இந்த வாரம் இல்லை என்பது பலருடைய வருத்தமாக இருக்கிறது. அதே நேரத்தில் குரோஸி மற்றும் மாகாபா இருவரும் நடுவர்களையே கலாய்த்து பல்பு வாங்கி இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் அருணா மேடைக்கு அழைக்கும் போது ஒரு மியூசிக் ஒலிக்கப்படுகிறது. அது கங்கை அமரன் பாடல் தான்." வந்தனம் என் வந்தனம்" என தொடங்கும் பாடல் மியூசிக் கேட்கிறது. அதை கேட்டு மாகாபா என்ன உங்களுக்கு மட்டும் சீரியல் மியூசிக் போடுறாங்க என்று அருணாவிடம் கேட்க, டேய் இது நான் கஷ்டப்பட்டு போட்ட மியூசிக் என்று கங்கை அமரன் கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து இது உங்க பாட்டா ஐயோ என்று பதறியபடி குரோஸி சொல்ல, ஆனாலும் மீண்டும் மாகாபா என்ன பாட்டு இது?," வந்தனம் சைதாப்பேட்டை நந்தனும்னு" இது ஒரு பாட்டா என்று நக்கல் செய்ய," ஏய் நான் போறேன் பா எனக்கு இது சரிப்பட்டு வராது என்று சொல்ல, அதற்கு மாகாபா சார் போகாதிங்க சார், நானும் வந்துருவேன் உங்க கூட என்று மேலும் நக்கல் செய்ய கடுப்பான கங்கை அமரன் ஏய் என்று அதட்டுகிறார். தற்போது இந்த பிரமோ பரபரப்பாக வலம் வருகிறது.

இந்த நிலையில் கங்கா அமரன் யாருன்னு தெரியுமா? இப்படி கூப்டு வச்சி நிகழ்ச்சியில் அவமானப்படுத்துறாங்களே, ஒரு பாடலாசிரியராகவும், பாடகராகவும் இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும் பல முகங்களை வைத்திருக்கும் கங்கை அமரன் இயக்கிய படங்களில் ஒரு கதை இருக்கும். அந்த கதையை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்காக எளிய திரைக்கதையும் இருக்கும். அதற்குள்ளே காமெடியும், செண்டிமெண்ட்டும் இருக்கும்.
முக்கியமாக பாடல்கள் பட்டய கிளப்பும். அது மட்டுமாங்க அவருடைய திரைப்படங்களில் அதிகமாக கண்ணுக்கு முழுமையான லொகேஷனும் இருக்கும். அந்த மாதிரி பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த கங்கை அமரன் இந்த நிகழ்ச்சியில் இப்படி கலாய்க்கப்படுவது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தமாக இருப்பதாக கமெண்ட்களில் தெரிவிக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு கிடைத்த அதிர்ச்சி.. மீனாவுக்கு தெரிய வந்த பெரிய உண்மை.. கோபத்தில் ஸ்ருதி, ரவி -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
விஜய்க்கு புது நெருக்கடி.. கமிஷனர் ஆஃபீஸில் பிக் பாஸ் ஜூலி கொடுத்த புகார்.. தவெக நிர்வாகிகளுக்கு சிக்கல் -
என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. விஜய் சேதுபதி உருக்கம் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications