அரசு நிலத்தை ஆக்கிரமித்த பிரபல நடிகர்? கோடி கோடியாய் பணம்.. பாஜக, திமுகவிடம் அடங்கி.. இது உண்மையா?
சென்னை: ரஜினியை பொறுத்தவரை, இந்த தமிழ்நாட்டு மக்களை 40 வருஷமா ஏமாத்திட்டு இருக்காரு. இந்த மக்கள்தான் அதை புரிந்து கொள்ளவில்லை.. சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவரே, தனக்கு வைத்து கொண்டார் என்றெல்லாம் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் பற்றி கடுமையாக விமர்சித்து, தாக்கி பேசியிருக்கிறார்.. அதன் சுருக்கம்தான் இது:

நிலவாடகை: "அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்தான் ரஜினி.. இதை சொன்னால், அவரது கல்யாண மண்டபம் இடிக்கப்படும்.. ஆசிரமம் பள்ளிக்கூடத்துக்கு நிலவாடகைக்கு வாடகையே தரவில்லை அவரது மனைவி.. இப்படி பல விஷயங்கள் உள்ளன.. அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வாடகைக்கு இருக்கக்கூடியவர்கள்தான் ரஜினியும், ரஜினி மனைவியும்..
இவர்களுக்கு டெல்லியிலும், தமிழகத்திலும் ஆளும் கட்சிகளை பகைத்து கொள்ள முடியாது. இரண்டையும் பகைத்து கொண்டால், ரஜினி வீட்டுக்கு இன்கம்டாக்ஸ் வரும், கல்யாண மண்டபத்துக்கு புல்டோசர் வரும்.
முஸ்லிம் சிறுபான்மையினர்: உபியில் முஸ்லிம் சிறுபான்மையினர் யாராவது வழக்குகளில் மாட்டிக் கொண்டால், உடனே "புல்டோசர் யோகி" கிளம்பி வந்துருவாரு.. முஸ்லிம் வீடுகள் மட்டுமே அங்கு தரைமட்டமாகும்.. அதுபோல, திமுகவுக்கு எதிராக ரஜினி பேசினால், ஸ்டாலினும் புல்டோசர் பாபாவாக மாறிடுவார். அதனால் திமுகவிடம் அடக்கி வாசிக்க வேண்டும். பிஜேயிடம் அடங்கி போக வேண்டும். இதுதான் ரஜினியின் வீரம்.
பிஜேபி கேட்டு கொண்டதாலும், வேதாந்தம் நிறுவனம் ஓனர் அனுப்பி வைத்ததாலும், அன்று ஸ்டெர்லைட்டுக்கு போனாரு ரஜினி.. அனில் அகர்வால் அனுப்பிதான் போனாரு.. அனில் அகர்வாலிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, தூத்துக்குடி மக்களுக்கு எதிராக பேசினார் துப்பாக்கி சூட்டிற்கு காரணம், சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள் என்று சொல்லிவிட்டு வந்தார். தனக்கு கிடைத்த இந்த அவமானத்தை, துடைத்து போட்டுவிட்டு போய்விட்டார் ரஜினி.
நெல் மூட்டை: இருக்கிற பல கோடிகள் பணத்தை, இன்னும்பல கோடிகளாக பெருக்க வேண்டு்ம் என்பதே ரஜினி, அவரது மனைவி லதா ரஜினியின் நோக்கம். 1 மூட்டை நெல் 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. ஆனால், வெறும் 2 மணிநேரம் பார்க்கிறதுக்கு, சினிமா டிக்கெட்டுக்கு 1500 ரூபாய் விற்கப்படுகிறது.. இப்படியொரு முட்டாள் கூட்டம் இருக்கிற மாநிலம் இது என்பது ரஜினிக்கும் தெரியும். அதனால்தான் திமுக பற்றி பேசுவதேயில்லை..
அதேபோல எப்போதுமே அரசியல் கட்சியை துவங்கணும்னு அவர் நினைத்தது கிடையாது.. 50 கோடி ரூபாய்க்கு தன்னுடைய படத்தை விளம்பரம் செய்யணும்.. கட்சி ஆரம்பிக்க போறேன்னு சொன்னால், அந்த 50 கோடி ரூபாய் விளம்பரமும் சும்மா கிடைச்சிடும்... ஒவ்வொரு படம் வரும்போதும், இதுதான்அவரது தந்திரம். ரஜினியை பொறுத்தவரை, இந்த மக்களை 40 வருஷமா ஏமாத்திட்டு இருக்காரு.
லிங்கா: லிங்கா படம் ஓடாமல், பணம் கொடுத்த விநியோகஸ்தர்கள், ரஜினி வீட்டை முற்றுகையிட்டு, வீட்டினை பூட்டு போடும் போராட்டம் யாருக்கும் தெரியாதா என்ன? சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இவரே தனக்கு வைத்து கொண்டார்.. தளபதி என்று விஜய்க்கு யார் பெயர் வைத்தார்கள்? பாகிஸ்தான் யுத்தத்தில் விஜய் கலந்துக்கிட்டாரா? பீரங்கி படை தளபதியா?" என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications