பெருகிக் கொண்டிருக்கும் ஆதரவால்... திணறிக் கொண்டிருக்கும் ரசிகர்கள்.. எதிர்பார்க்காத முடிவு
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நிலவி வரும் குழப்பமான நிலவரங்களை பார்த்து ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் பெருகி வரும் ஆதரவு மட்டுமல்லாமல் போஸ்ட்களும் ராஜுவின் ரசிகர்களை கலங்க வைத்து வருகிறது.

ரசிகர்களின் கருத்து போட்டி
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கிராண்ட் பினாலே நாளை இருக்கும் தருணத்தில் இன்று போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை பிடித்த ரசிகர்களுக்கும் தூக்கம் வராது போல, அதனால்தான் சமூக வலைதளத்தை தங்களுடைய கருத்துகளை பதி விட்டு வருகிறார்கள். ஏற்கனவே இவர்கள் கடந்த நூறு நாட்களாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தாலும் தற்போது தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதில் போட்டி நிலவி வருகிறது.

கொஞ்சம் குழப்பம்தான்
பிக் பாஸில் ஐந்தாவது சீசனில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், இன்று ஒரு போட்டியாளர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற இருக்கும் தருணத்தில், ஜெயிக்கப்போவது யாராக இருக்கும் என்பது தான் பலருடைய கேள்வியாக இருந்துவருகிறது. ஆரம்பத்திலிருந்து மக்களின் மனதை ஜெயித்தவரா??அல்லது தனது கருத்துக்களை எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தைரியமாக எடுத்துரைத்தவரா??என்பது பலருடைய குழப்பமாக இருந்து வருகிறது.

சமூக வலைத்தளத்தில் ஆதரவு
இப்போது இருக்கும் ஐந்து போட்டியாளர்களில் நிரூப் ஐந்தாவது போட்டியாளராக வெளியேற போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் மீதம் இருப்பது ராஜு, பிரியங்கா, பாவனி, அமீர் இந்த நான்கு பேருமே விஜய் டிவியை சார்ந்தவர்களாக இருப்பதால் இவர்களில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு பக்கம் குழப்பமாக இருந்து வருகிறது. ஆனால் இது வரைக்கும் இல்லாத வகையில் இன்று அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவிற்கு சப்போர்ட் கொடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களையும் ஆதரவுகளையும் பிரியங்காவிற்கு தெரவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிகரிக்கும் ஆதரவு மற்றும் அன்பு
நேற்றைய எபிசோடில் பிரியங்காவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை வீட்டிற்கு பிக்பாஸ் அனுப்பி வைத்துவிட்டது. உடல்நிலையை சரி செய்துவிட்டு பைனலில் அன்று நேரடியாக அவரை கலந்துகொள்ள சொல்லியிருந்தது. இதனை பார்த்ததும் பிரியங்கா விரைவில் நலம் பெற்று வரவேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் அவருக்கு எனர்ஜி கொடுக்கும் விதமாக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ராகவா புலி, தன்னுடைய இன்ஸ்டாகிராமில், நீ இவ்வளவு தூரம் வந்ததே எனக்கு பெருமை தான் அக்கா...என்று பிரியங்காவை டேக் செய்து, திரும்பி வா உன் திசை எது தெரிந்தது, மாறிப் போகாது..என பாடல் வரிகளை அனுப்பியிருக்கிறார். இதை பார்க்கும்போது அப்போ டைட்டில் வின்னர் பிரியங்கா தானா? ?என ரசிகர்களின் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications