தமிழும் சரஸ்வதியும்: அர்ஜுன் பற்றி கோதைக்கு தெரிய வந்த உண்மை.. இனி ராகினி நிலை? பரபரப்பான திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கியமான தருணம் வந்திருக்கிறது.
இத்தனை நாட்களாக அர்ஜுன் நல்லவன் என்று நம்பிக் கொண்டிருந்த கோதைக்கு அர்ஜுன் பற்றி மொத்த உண்மையும் தெரிய வருகிறது.

அதே நேரத்தில் இனி தமிழுக்கு எதிராக அர்ஜுன் செய்யும் செயல்களை கோதை தானே கண்டுபிடிக்க போவதாக சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியேறி இருக்கிறது. அதைத் தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலிலும் அடுத்தடுத்த பல எதிர்பாராத திருப்புங்கள் அட்டகாசமாக வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் கதை வேகம் எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய புரோமோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் சரஸ்வதி செய்த வேலையால் அர்ஜுன் பற்றிய ரகசியங்களை கோதை தெரிந்து கொள்கிறார். அதனால் தன்னுடைய கணவர் நடேசனிடம் அப்போ அந்த அர்ஜுன் இத்தனை நாளா நல்லவனா நடிச்சு நம்மளை ஏமாத்திட்டு இருந்திருக்கான். அர்ஜுன் தான் தமிழை திட்டம் போட்டு மாட்டிவிட்டு இருக்கான்.
அர்ஜுன் கெட்டவன். அவ மேல தான் தப்பு இருக்குன்னு நான் இப்பதான் முழுசா நம்புறேன். இத்தனை நாளா நீங்க முயற்சி பண்ணுனீங்க. இனிமே நானே நேரடியா இறங்குறேன். அர்ஜுன் உடைய முகமூடியை நானே கழட்டி வீசுறேன் என்று அதிரடியாக கோதை பேசுவதை கேட்டு நடேசன் என்ன பேசுவது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்.

ஏற்கனவே ராகினி தன்னுடைய கணவர் அர்ஜுனை சொத்துக்காகவும் பதவிக்காகவும் தமிழ் கொலை செய்ய வந்து விட்டான் என்று அர்ஜுன் சொன்னதை நம்பி ஒவ்வொரு முறையும் தமிழ் மற்றும் சரஸ்வதியை அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் இனி தன்னுடைய மகனை புரிந்து கொண்ட அம்மாவால் அர்ஜுன் மாட்ட போகிறாரா? அல்லது இப்போதும் ராகினியை வைத்து அர்ஜுன் புது நாடகம் போடப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் முக்கியமான திருப்பங்கள் வந்திருப்பதால் இந்த சீரியல் முடிவடைய போகிறதா? என்று பலர் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர். சீரியலில் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்களும் சீரியலுக்கு வேகம் கூட்டி இருந்தாலும் ஒருவேளை இது முடிவடைந்து புது சீரியல் வருவதற்கான காரணமாக இருக்குமோ என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications