காதலுக்கு மொழி எதற்கு? இதயம் தொட்ட காதல்.. தமிழா தமிழாவில் நெகிழ்ச்சி.. இப்படியுமா காதலிப்பாங்க!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் வரும் ஜூன் 23ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வாரம் மனங்கள் பேச மொழிகள் எதற்கு இதயம் தொட்ட காதல் கதைகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதில் மொழித்தாண்டி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தமிழா தமிழா. ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து மாறுபட்ட தலைப்புகளை கையில் எடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் ரியல் காதல் காவியங்களை கொண்டாடும் அரங்கமாக தமிழா தமிழா மேடை மாற உள்ளது.
இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் மதம், இனம், நாடு, மொழி இவற்றையெல்லாம் கடந்து திருமணம் செய்து கொண்ட காதலிக்க ஜோடிகளின் காவியமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த நபரும் தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் சமூக வளையதளத்தின் மூலம் அறிமுகமாகி முதல் முறை நேரில் சந்தித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட கதையை தெரிவித்துள்ளனர்.
அதே போல் கேரளாவை சேர்ந்த பெண்ணும் தமிழகத்தை சேர்ந்த ஆணும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்குள் பாஷை ஒரு பிரச்சனையாக இல்லை, காதலுக்கு பாஷை எல்லாம் கிடையாது எனவும் பேசியுள்ளனர்.
இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இந்த நிலையில் இந்த எபிசோடு அதிகமாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுபோல மொழி கடந்து காதலித்தவர்கள் பலர் காதல் வாழ்க்கையில் பயணித்து கொண்டிருக்கிறீர்களா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
ஆரம்பத்தில் ஏதோ ஒரு உந்துதலில் காதலில் சிக்கி திருமணமும் செய்து விடுகிறார்கள். ஆனால் சில வருடங்களில் இந்த காதல் வாழ்க்கையில் இருந்து சிலர் பிரிந்து விடுகிறார்கள் என்று சில தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் காதல் என்றாலே அழகுதான். அது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள், மொழிக்குள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
நமக்கு பிடித்து, நம்மை ஒருவர் நன்றாக பார்த்துக் கொள்வார் நம்முடைய வாழ்க்கைக்கு துணையாக இருப்பார் என்று தெரிந்தாலே அவர் மீது தானாக காதல் வந்துவிடுகிறது. அந்த காதல் மட்டும் கடைசி வரைக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனாலும் இந்த வார நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications