Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்படி அவர் கூட நீங்க படம் பண்ணலாம்.. வளர்த்துவிட்ட இயக்குனரின்.. காலையே வாரிய 3 எழுத்து ஹீரோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் திரைப்பட வட்டாரங்களில் ஒரு பரபரப்பான செய்தி உலா வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், ஒரு காலத்தில் தனது சினிமா வாழ்க்கையை வடிவமைத்த இயக்குனருடனேயே மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார் என்பதே அந்த செய்தி.

தனக்கு நெருக்கமான நட்பாக இருந்த இயக்குனர் உடனே.. கடுமையான மோதலை கடைப்பிடித்து வருகிறாராம் அந்த நடிகர்.

gossips

இழப்பீடு கோரும் மூன்றெழுத்து நடிகர்

வெற்றிகரமான அந்த இயக்குனரிடமே இழப்பீடு கோரும் அளவிற்கு அந்த மூன்று எழுத்து நடிகர் சென்றுவிட்டாராம். ஒரு காலத்தில் நம்பிக்கையின் அடையாளமாக போற்றப்பட்ட இந்த நட்புறவு, தற்போது கசப்பு, அகங்காரம் மற்றும் பல கோடி ரூபாய் இழப்பீடு கோரும் நிலைக்கு வந்துள்ளது. கோலிவுட் வட்டாரங்‍களி‍ல் இருந்து வரும் தகவல்களி‍ன் படி, அதிக ரசிகர்‍களை கொண்ட அந்த நடிகர் தனது நீண்டகால நண்பரான இயக்குனர் மீது கோபத்தில் இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

தனது தொழில்முறை போட்டியாளருடன் ஒரு திரைப்படத்தில் அந்த இயக்குனர் ஒப்பந்தம் செய்துகொண்டதால் இந்த 3 எழுத்து நடிகர் அதிருப்தி அடைந்துள்ளார். அந்த போட்டியாளர் நடிகர் பல ஆண்டுகளாக தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இந்த 3 எழுத்து ஹீரோவுடன் நல்லுறவு இல்லாமல் இருப்பவர்.

ஒரு காலத்தில் சரிந்து போயிருந்த இந்த 3 எழுத்து ஹீரோவின் சினிமா வாழ்க்கையை மீட்டெடுத்தவர் என்று கூறப்படும் அந்த இயக்குனர்.. இப்போது இந்த போட்டி ஹீரோவை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படத்தை இயக்கப்போவதாக அறிவித்ததும், இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இது குறித்து நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், "முதலில், நடிகர் இது வெறும் வதந்தி என்று நினைத்தார். ஆனால் அது உண்மையானது என்று தெரிந்ததும், அவர் கடும் கோபமடைந்தார். இயக்குனரின் அழைப்புகளைக் கூட அவர் ஏற்க மறுத்துவிட்டார்.. அந்த ஹீரோவிடம் சொல்லிவிட்டுத்தான் இயக்குனர் படமே எடுக்க திட்டமிட்டார்.. எல்லாம் கேட்டுவிட்டு ஓகே சொன்னவர்.. இப்போது படத்தை எதிர்க்க தொடங்கிவிட்டார்" என்றனர்.

இந்த நட்பு பகையாக மாறியதால், இயக்குனர் அந்த நடிகரை வைத்து பிரபலமான திரைப்படத்தின் பார்ட் 2வை உருவாக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த திரைப்படத்தின் முதல் பகுதியை ரசிகர்கள் இப்போதும் கூட பார்த்து ரசித்து வருகின்றனர். ஆனால் இந்த முறை நடிகர், அந்த திரைப்படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க வேண்டுமானால், சுமார் ₹20 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

சினிமா வட்டாரத்தில் சலசலப்பு

இதனால் ரசிகர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சிலர் நடிகரின் நிலைப்பாட்டை ஆதரித்து, தொழில்முறை சுதந்திரத்தை விட விசுவாசம் முக்கியம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், ஹீரோவுக்கு சினிமா வாழ்க்கையை கொடுத்த இயக்குனருக்கே எதிராக திரும்பியது சரியில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இயக்குனர் இந்த பிரச்சினை குறித்து வெளிப்படையாக எதுவும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார். இது குறித்து இயக்குனருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், "அவர் இன்னும் நடிகரை மதிக்கிறார், ஆனால் அவர் யாருடன் வேண்டுமானாலும் வேலை செய்ய அவருக்கு உரிமை உண்டு. சினிமா ஒரு போர்க்களம் அல்ல, ஆனால் சிலர் அதை அப்படித்தான் பார்க்கிறார்கள்" என்றனர்.

தற்போது, இரு தரப்பினரும் இது குறித்து வாய் திறக்காமல் உள்ளனர். ஆனால் விரைவில் இருவரில் ஒருவர் இறங்கி வரவில்லை என்றால், இது கோலிவுட்டின் மறக்க முடியாத சோகமான மோதல்களில் ஒன்றாக மாறிவிடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+