Test Review: விளையாட்டு வீரர் சித்தார்த்தின் விரக்தி! தாய்மைக்கு ஏங்கும் நயன்தாரா! கடனாளியான மாதவன்
டெஸ்ட் பட விமர்சனம் Rating 2.5/5 டெஸ்ட் திரைப்படம் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒரு முக்கியமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிரிக்கெட் வீரர் (சித்தார்த்), ஒரு விஞ்ஞானி (மாதவன்), மற்றும் ஒரு ஆசிரியையின் (நயன்தாரா) வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று பின்னி ஒரு திரில்லர் கதையாக விரிகின்றன. கிரிக்கெட், குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
படத்தின் ஆரம்ப 30 நிமிடங்கள் கதை எதை நோக்கி செல்கிறது என்பது சுவாரசியமாக எடுத்து செல்லப்படவில்லை. அதோடு, மாதவனைத் தவிர மற்றவர்களின் நடிப்பில் செயற்கை தன்மை தெரிந்தது. குறிப்பாக நயன்தாரா எப்போதும் பளிச்செனும் மேக்கப் தோற்றத்துடன் மட்டுமே வருவதால், கதையின் இயல்புடன் ஒத்துப்போகவில்லை.

மாதவனின் இயல்பான நடிப்பு இப்படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. ரொமான்ஸ் செய்யும் கணவனாகவும், திருப்பம் கொண்ட வில்லனாகவும் அவர் நடித்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது.
சித்தார்த் படம் முழுவதும் சோகமான முகத்துடன் அங்கும் இங்கும் நடந்து செல்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமான எழுத்து தேவைப்பட்டிருக்கலாம்.
கதை என்பது ஒரு சிறிய கருவே, அதை பெரிய திரைக்கதையாக மாற்ற முனைந்து முயற்சித்துள்ளனர். சில இடங்களில் இது கதைநடையை மெதுவாக்குகிறது.
பொறுமையாக படம் பார்த்தால், மெதுவாக படம் பிடித்து விடும். சில குறைகள் இருந்தாலும், ஒரு முறை பார்வைக்கு தகுந்த படமாகும்.
இந்த படம் நெட்பிளிக்ஸில் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் பார்வையாளர்கள் அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் மொத்தமே ஒன்றே முக்கால் மணி நேரம்தான். இதில் சித்தார்த்தின் மனைவியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.
சித்தார்த் சிறு வயது முதலே ஏழையாக வளர்ந்து இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். அவர் சரியாக செயல்படாததால் அவரை இந்திய அணியில் இருந்து நீக்க பேச்சு நடந்து வருகிறது. இதனால் அவர் அவரை நிரூபிக்க கடைசி வாய்ப்பாக ஒரு விளையாட்டு போட்டி வருகிறது.
அது போல் மாதவனின் மனைவி நயன்தாரா, இவர் பள்ளி ஆசிரியை. நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுகிறார். ஆனால் அதற்கு அவருடைய பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை.
மாதவன் எம்ஐடி படித்த விஞ்ஞானியாக நடித்துள்ளார். அவர் கேன்டீன் நடத்தி வருகிறார். அதே வேளையில் ரகசியமாக எரிசக்தி ஆற்றலை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதற்காக நிறைய கடன் வாங்குகிறார். ஆனாலும் அவரது கண்டுபிடிப்பை வெற்றிகரமாக்க ரூ 50 லட்சம் தேவைப்படுகிறது. இப்படி வித்தியாசமான தொழிலில் உள்ள மூவரின் வாழ்க்கை போராட்டங்கள் குறித்துதான் கதை! இவர்களது லட்சியங்களில் கனவுகளில், ஆசைகளில் வென்றார்களா என்பதை ஓடிடி தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications