நடிகை தாரணிக்கு நடந்த கொடுமை.. அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட கேமராமேன்.. முகத்தில் சூடாக அதை திருப்பி...!
சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரை என்று 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் தான் நடிகை தாரணி.
இவர் பல சீரியல்களிலும், வெள்ளி திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அதுவும் பட்ஜெட் பத்மநாபன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு மனைவியாக தாரணி தான் நடித்திருப்பார். அதில் "மாலா மாலா" என்று வடிவேலு இவர் பின்னாடி சுற்றிக் கொண்டே இருப்பார்.

திரைப்படங்களில் அதிகமாக வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த தாரணியை பார்த்து அந்த நேரத்தில் பல பிரபலங்கள் கூட இவர் கோவை சரளாவுக்கு போட்டியாக வருவார் என்று கூறினார்க. ஆனால் தாரணி சில வருடங்களுக்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் சின்ன திரையில் நடிக்க தொடங்கி விட்டார்.
தற்போதும் ஒரு சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவில் அறிமுகமாகிய காலகட்டத்தில் தனக்கு நடைபெற்ற பல சோதனைகள் பற்றியும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கை பற்றியும் பேசி இருக்கிறார்.
அப்போது ஆரம்பத்தில் தான் நடித்த இரண்டு படங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் நான் ஹீரோயினியாக நடித்த போது இயக்குனர் மற்றும் கேமராமேன் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்க. ஆனால் அதிலும் கேமரா மேன் தான் அதிக முறை வெளிப்படையாகவே என்னிடம் கேட்டார்.
அப்போது தங்கச்சி நடிகையாக இருந்த உன்னை ஹீரோயினா ஆக்கி இருக்கோம் என்று சொல்லி காண்பித்தார். அதற்கு நான் அவரிடம் தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க. நான் எப்படி சினிமாவில் வந்தேன் என்று கேட்டுட்டு வாங்க, தப்பான வழியில் நான் வந்திருந்தேனா நீங்க சொல்றத நான் செய்கிறேன் என்று சொன்னேன்.
அவர் அந்த பதிலை எதிர்பார்க்காமல் பிறகு என்னை விட்டு விட்டார். ஆனால் அதிகமாக சூடு இருக்கும் லைட்டை என் மீது காட்டி என்னை நடிக்கும் போது அதிகமாக கஷ்டப்படுத்தினார் என்று தாரணி கூறியிருக்கிறார். தொடர்ச்சியாக சினிமாவிலும், சீரியலிலும் அதிகமான நடிகைகள் தாங்கள் அனுபவித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் தாரணி கேமராமேனால் தான் பட்ட வேதனை பற்றி கூறியிருப்பதும் பலரால் பேசப்பட்டு வருகிறது.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
அந்த படத்தில் பிகினியில் நடித்ததால் நடந்த சம்பவம்! பல வருடங்களுக்கு பிறகு வருத்தத்தை பகிர்ந்த பிரியா மணி -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications