தமிழில் பேச சொன்னது தப்பா??.. தொடங்கியது பிரியங்கா, அக்ஷராவின் புது சண்டை
சென்னை: பிரியங்கா மற்றும் அக்ஷராவின் இடையில் மீண்டும் ஏற்பட்ட வாக்குவதங்கள் முதல் ப்ரமோவில் மிரட்டி வருகிறது.
மறுபடியும் முதலில் இருந்தா என்று நெட்டிசன்கள் பிரியங்கா மற்றும் அக்ஷரா சண்டையை பார்த்து கூறிவருகின்றனர்.
தமிழில் பேச சொன்னது தப்பா என்று பிரியங்கா தொடங்கிய சண்டைக்கு நெட்டிசன்கள் பிரியங்காவை கலாய்த்து வருகின்றனர்.

சண்டைகளுக்கு பஞ்சமில்லை
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் தற்போது 70 நாட்கள் கடந்த நிலையில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு நாளும் நகர்ந்து வருகிறது. எப்படியாவது புதுப்புது பிரச்சனைகளை தொடங்கினால்தான் விளையாட்டில் ஜொலிக்க முடியும் என்று போட்டியாளர்கள் இப்படி நடந்து கொள்கிறார்களா??அல்லது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு தலைவிரித்து ஆட தொடங்கி விட்டதா?? என்று ரசிகர்களுக்கு குழப்பமாகத்தான் இருந்துவருகிறது.

சத்தம் அதிகமாக இருக்கிறதே
ஆரம்பத்தில் ஒன்றாக ஒற்றுமையாக இருந்த போட்டியாளர்கள் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி காரசாரமாக மோதி வருகின்றனர். அதுவும் இன்றைய எபிசோட்டில் முதல் பிரியங்கா மற்றும் அக்ஷராவின் சண்டை வேற லெவல் இருந்து வருகிறது. ஏற்கனவே கோபம் வரும்போது அக்ஷரா நடந்து கொள்வதை பார்த்து கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கும் போது தற்போதைய அவருடைய காரசாரமான வாக்குவாதம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனக்கு கத்தி பேசினால் பிடிக்காது என்று கூறிக் கொண்டிருந்த அக்ஷரா தற்போது அனைவரின் காதுகளையும் ரணமாக்கும் வகையில் கத்தி கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் தங்கள் பங்குக்கு கலாய்த்து வருகிறார்கள்.

காரசாரமான வாக்குவாதம்
வாட் இஸ் யுவர் ப்ராப்ளம் என்று கோபத்தின் உச்சத்தில் அக்ஷரா வருணிடம் கத்திக் கொண்டிருக்கிறார். வருண் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தாலும் அக்ஷராவின் கோபம் குறைந்த பாடு இல்லை. அதே நேரத்தில் பிரியங்கா என்ன மச்சான் தமிழ்ல பேசு மா னு சொன்னேன் அதுக்கு போ...ன்னு என்று சொல்லிவிட்டு போய்விட்டா என தனக்கே உரிய கணீர் குரலோடு அக்ஷராவை குறைகூறி கொண்டிருக்கிறார். ஒரு வாட்டி ரெண்டு வாட்டி இப்படி பேசி இருந்தா நான் சும்மா இருந்து இருப்பேன் ஆனால் எல்லா வாட்டியும் இப்படி பேசிக்கொண்டு இருந்தார் நான் என்னுடைய செல்ப் ரெஸ்பான்ஸ் விட்டு விட்டு சும்மா இருக்க மாட்டேன் என்று ப்ரியங்கா தன் பங்குக்கு கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் கலாய்ப்பு
பிரியங்காவின் பேச்சுக்கு இவங்களுக்கு மட்டும் தான் செல்ப் ரெஸ்பான்ஸ் இருக்கு...மத்தவங்க யாருக்கும் இல்லையா என்று அக்ஷரா பதில் கேள்வியை வருண் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்ப எல்லாரும் லூசு மாதிரி ரோட்டில் சுத்திக்கிட்டு அவங்க இங்க வந்து இருக்குமா என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இவர்களின் இருவரின் சண்டைகளை பார்க்கும் நெட்டிசன்கள் அடுத்தவர்களை குறை கூறும் பிரியங்கா முதலில் தமிழில் பேச வேண்டும். அடிக்கடி கோபப்படும் போதெல்லாம் இங்கிலீஷில் பிரியங்காவும் பேசி வருகிறார் என்று பலர் பிரியங்காவையும் கலாய்த்துக் கொண்டு இருந்தாலும், ஒரு சிலர் அக்ஷராவையும் கலாய்த்து வருகின்றனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications