நடிகை கண்மணி- அஸ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது! காதல் கவிதையில் புதிய ட்விஸ்ட்!
சென்னை: சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரனுக்கும்- அஸ்வத்திற்கும் குழந்தை பிறந்துள்ளது. தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையை கொஞ்சியபடியே அவர்கள் எடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் கண்மணி மனோகரன். இதையடுத்து இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய கண்மணி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் முக்கிய நாயகியாக நடித்தார்.

இதையடுத்து பல்வேறு சீரியல்களில் நடித்த கண்மணி, சன் தொகுப்பாளர் அஸ்வத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து ஒரு ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்வில் கூட, மாமியார் செய்த சிறு தவறால் அஸ்வத் தோற்றதை அடுத்து மாமியார் கண்ணீர் விட்டார். தன்னால் தனது மருமகன் தோற்றுவிட்டாரே என கண்ணீர் சிந்தினார். இந்த நிலையில் திருமணம் முடிந்த 5 மாதத்தில் வெளிநாட்டிற்கு பயணம் செய்திருந்தார்.

கண்மணி எப்போதுமே சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது கண்மணி கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அஸ்வத்தும் கண்மணியை கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படமும் வெளியாகி வைரலானது.
இதற்கு சின்னத்திரை பிரபலங்களும் கண்மணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் கண்மணி- அஸ்வத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
அந்த பதிவில் நாங்கள் இருவரும் ஒரு காதல் கதையை எழுதினோம். அந்த காதல் கதையில் ஆச்சரியம் நிறைந்த புனித பயணம் கிடைத்திருக்கிறது. எங்களது செல்லக் குட்டியுடன் இந்த இனிய பயணம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கு இலக்கியா சீரியல் நடிகர் விஜய் முதல் ஆளாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் வாழ்த்துகள் மாப்ள. இனிமே உனக்கு செம அடி இருக்கு, என் குட்டி மச்சான்கிட்ட பத்ரமா இரு என தெரிவித்துள்ளார். அது போல் ரசிகர்களும் அஸ்வத், கண்மணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு கடந்த 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தின் போது குழந்தை பிறந்துள்ளது. இதனால் கண்மணியும் அஸ்வத்தும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications