அதிக சம்பளம் வாங்கிய சீரியல் நடிகை.. அதுவும் ஒரு நாளைக்கு 14 லட்சம்! எந்த சீரியலுக்காக தெரியுமா?
சென்னை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் சிலர் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை போல அதிகமான சம்பளம் வாங்கி வருகிறார்கள். அதில் ஒரு சிலர் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சம்பளம் வாங்கி இருக்கிறார். பிரபல நடிகை ஒருவருக்கு ஒரு நாளைக்கு 14 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஆரம்பத்தில் எல்லாம் சினிமாவில் நடித்து பெயர் வாங்கி பிறகு அங்கு மார்க்கெட் குறைய தொடங்கிய பிறகு தான் சீரியலை நோக்கி நடிகைகள் வருவார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படி கிடையாது. இப்போது சின்னத்திரையில் அறிமுகமாகும் பல நடிகைகளுக்கு வெள்ளித்திரையிலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்கு உதாரணமாக நடிகை சிம்ரன், ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் உட்பட பல நடிகைகளின் பெயரை சொல்லிக் கொண்டே போகலாம்.

கயல் சீரியல் நடிகை
அதேபோல சினிமாவில் நடிக்கும் நடிகைகளின் படங்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டும் வெளியாகும் ஆனால் சீரியலில் அறிமுகமாகும் நடிகைகளை தினமும் மக்கள் பார்ப்பதால் அவர்கள் தான் அதிகமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர். அதனாலேயே கடை திறப்பு விழா, தனியார் நிகழ்ச்சி என்று எந்த நிகழ்ச்சியிலும் சின்னத்திரை பிரபலங்கள் அழைக்கப்படுகிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் தான் அழைக்கப்படுகிறார்கள்.
சீரியல் நடிகைகளின் சம்பளம்
அதுபோல சோசியல் மீடியா பக்கங்களிலும் சின்னத்திரையில் நடிகைகள் அதிகமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு பரிச்சயமான நபராக இருக்கிறார்கள். ஒரு சில சீரியல்கள் நல்ல டி ஆர் பி பெற்றுவிட்டால் அந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சைத்ரா ரெட்டி ஒரு பேட்டியில் பேசும்போது ஒரு நாளைக்கு நீங்க ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்களா! என்று கேட்கப்பட்டபோது அதற்கு அவர் சிரித்தபடியே மழுப்பலாக பேசியிருந்தார்.
14 லட்சம் சம்பளம் வாங்கும் சீரியல் நடிகை
அதனால் அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லட்சமா? என்று வியந்து வருகிறார்கள். ஆனால் சின்னத்திரையில் நடித்த ஒரு நடிகைக்கு ஒரு நாளைக்கு 14 லட்சம் வரை சம்பளம் வாங்கினார் என்ற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை ஸ்மிருதி இரானி தான். இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதி, தொலைக்காட்சி தயாரிப்பாளர், மாடல் என்ற பன்முகத்தன்மை கொண்டு விளங்குகிறார்.

அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகை
முதல் முறையாக ஸ்மிருதி "கியூங்கி சாஸ் பிக்மி பஹதி" தொலைக்காட்சி தொடரில் துளசி என்ற கேரக்டரில் தான் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஆரம்பத்தில் 8000 சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த பிறகு 50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டது. "கியூங்கி சாஸ் பி கபி பஹதி" சீரியலில் அடுத்த சீசனில் நடிப்பதற்காக ஸ்மிருதி இரானி 14 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications