Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாம் ஜாமுனு கல்யாணம்.. மணமக்கள் உடம்பில் ஆடையில்லை.. உறவினர்களும் அப்படியே.. பிரபலம் பகிர்ந்த தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாக சினிமா தகவல்களை பகிர்ந்து கொள்ளும் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், 2 வெளிநாட்டு செய்திகள் குறித்து தற்போது பேசியிருக்கிறார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் கடந்த 2001ம் ஆண்டு 8 ஜோடிகள் ஆடை இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர்.. அப்போதிருந்து வருடா வருடம் இங்குள்ள ரிசார்ட் ஒன்றில் நிர்வாண திருமணங்கள் நடக்கின்றன. சமீபத்தில் கூட 29 ஜோடிகள் இங்கு நிர்வாணமாக திருமணம் செய்தார்கள்.

Television unique wedding 3 minute hugs

நிர்வாண திருமணம்: கணவன்-மனைவிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான திருமணங்களை ஊக்குவித்து வருவதாக ரிசார்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஒரு கலாச்சார சீரழிவு என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், இதுபோன்ற திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தைதான், King 24x7 என்ற யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.. "நம்ம ஊரில் நடக்கும் திருமணங்கள் விசேஷமாக இருக்கும். பந்தக்கால், மருதாணி நிகழ்வு, அடுத்த நாள் கல்யாணம், 3வது நாள் ரிசப்ஷன் என அமர்க்களப்படும். இதுவே ஐயங்கார், ஐயர் திருமணங்களில் காசு எடுப்பது, ஊஞ்சல் என திருமண சடங்குகள் நடக்கும்.

நெப்போலியன்: நடிகர் நெப்போலியன் வீட்டில்கூட இப்படித்தான் 3 நாட்கள் தொடர்ந்து திருமண வைபவம் நடந்தது. காசு இருந்தால் இப்படி செய்யலாம். காசு இல்லாவிட்டால் வடபழனி கோவிலில் கல்யாணத்தை எளிமையாக முடித்து கொள்வார்கள்.

ஆனால், வினோதமான திருமணம் தற்போது நடந்துள்ளது. எதைதான் வினோதம் என்று சொல்வதென்றே தெரியவில்லை. காரணம், இப்போது எல்லாவற்றுக்குமே உரிமை உள்ளது, சுதந்திரம் உள்ளது,. அந்தவகையில், கரீபியின் தீவில் விநோதமான திருமணம் நடந்துள்ளது.. மணமகள், மணமகள் இருவருமே நிர்வாணமாக கல்யாணத்துக்கு வந்தார்கள்.. இவர்கள் மட்டுமல்ல, விழாவில் கலந்துகொண்ட அத்தனை பேருமே நிர்வாணமாக வந்தார்கள்

திருமணங்கள்: வருடத்துக்கு ஒருமுறை இப்படி அந்த நாட்டில் நடக்குமாம்.. விசேஷ திருவிழாவாக, விசேஷ சடங்காக, இதுபோன்ற திருமணங்கள் அங்கு நடத்தப்படும். அதுபோல இப்போதும் நடந்துள்ளது,

வழக்கமாக, நம்ம ஊரில் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளை வழியனுப்ப செல்வது உறவினர்களின் வழக்கம். இதனால், பிளாட்பாரங்களில் கால் வைக்கவே இடமில்லாத அளவுக்கு கூட்டம் வழிந்து நிறையும்.. அதனால்தான் பிளாட்பாரம் டிக்கெட் கொண்டுவரப்பட்டது.

ரயில்வே ஸ்டேஷன்: ஆனால் இப்படியொரு சிக்கல் நியூசிலாந்து நாட்டிலும் உள்ளது. அங்கு விமான நிலையங்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் வழியனுப்புவதற்காக நிறைய இளசுகள் வருகிறார்கள்.. உடனே அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் தந்து, வழியனுப்பியும் வைப்பது வழக்கம். அங்கெல்லாம் கட்டிப்பிடிப்பது ஒரு சாதாரண விஷயம்.இதற்கான உரிமை, சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது.

ஆனால் கட்டிப்பிடித்து கொண்டு 10 நிமிடத்துக்கு உறவினர்களை விடுவதில்லையாம்.. கட்டிப்பிடித்து முத்தம் தந்தவாறே, அப்படியே ரவுண்டாக நின்று வட்டமடிப்பார்களாம். இந்த பாச மழையால், விமான பயணிகளுக்கும், ரயில் பயணிகளுக்கும் இடையூறாக இருப்பதாக புகார்கள் சென்றவண்ணம் இருந்தன. இப்போது திடீரென தடை உத்தரவு ஒன்றை அந்த நாட்டில் போட்டிருக்கிறார்களாம்.

அதிரடி உத்தரவு: அதன்படி, யாராக இருந்தாலும் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. ஆனால், 3 நிமிஷத்துக்கு மேல் இவைகளை செய்யக்கூடாது. 3 நிமிடத்தை மீறினால் தண்டனை நிச்சயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஊருக்கு செல்பவர்களை வழியனுப்ப வருகிறவர்களிடம் அன்பையும், காதலையும் பரிமாறி கொள்ள வெறும் 3 நிமிஷம்தான் அனுமதியை அந்த நாடு அளித்துள்ளது" என்றெல்லாம் பல்வேறு தகவல் பகிர்ந்து கொண்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+