சரிகமப சீனியர்ஸ் 5 வெற்றியாளர்களுக்கு மாபெரும் பரிசுகள் அறிவிப்பு! அதுவும் இத்தனை லட்சத்தில் வீடு மற்றும் தங்கங்கள்
சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்மை சேனல்களில் ஒன்றான Zee தமிழில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று Zee தமிழ் சரிகமப சீனியர்ஸ் 5, இந்த சீசனில் வெற்றியாளர்களுக்கு இதுவரை இல்லாத பிரம்மாண்டமான பரிசுகளை அறிவித்துள்ளது.
தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்க, நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் ஆகியோர் பங்கேற்று வரும் சரிகமப சீனியர்ஸ் 5, மொத்தம் 28 போட்டியாளர்களுடன் மிக பிரம்மாண்டமாகத் தொடங்கி, உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான சுற்றுகளில் போட்டியாளர்கள் தங்கள் இசைத் திறமையை வெளிப்படுத்தி, மக்களின் மனதைக் கவர்ந்து வருகின்றனர். சாமானிய போட்டியாளர்களை சாதனையாளர்களாக மாற்றும் ஒரு மேடையாக இந்த நிகழ்ச்சி திகழ்கிறது.

இதுவரை இல்லாத அளவில் இந்த சீசனில் வெற்றியாளருக்கு ஒரு மாபெரும் பரிசு காத்திருக்கிறது. ஆம், இந்த சீசனில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ₹60 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் வீடு கட்டுவது என்பது பெரிய கனவு.. அப்படி இருக்கையில் ரூ 60 லட்சம் மதிப்புள்ள வீடே பரிசாக கிடைக்க போகிறது என்பது போட்டியாளர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, முதல் ரன்னர் அப் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ₹10 லட்சம் ரொக்கப் பரிசு காத்திருக்கிறது. மேலும், இரண்டாவது ரன்னர் அப் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ₹3 லட்சம் மதிப்புள்ள தங்கம் வழங்கப்படும். இவற்றுடன், மக்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளருக்கு ₹5 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிறப்புப் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பு சரிகமப சீனியர்ஸ் 5 போட்டியாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த சீசன் பார்வையாளர்களுக்கும் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரம்மாண்டமான பரிசுகள், போட்டியாளர்களின் திறமைக்குக் கிடைக்கும் பாராட்டுகளை மேலும் சிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications