வள்ளியின் வேலன்: கல்யாணத்தில் வந்த பிரச்சனை.. காயத்துடன் சரிந்து விழுந்த வேலன்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் பிரேமிடமிருந்து போனை எடுப்பதற்காக பிரேம் வீட்டுக்குள் வேலன் நுழைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது பிரேம் மற்றும் வேலன் என இருவருக்கும் இடையே கடுமையான சண்டை உருவாகிறது. ஒரு கட்டத்தில் பிரேம் வேலனை கட்டையால் தலையில் தாக்க அவன் அடிபட்டு கீழே சரிந்து விழுகிறான். இங்கே மண்டபத்தில் வள்ளி, வேலனை காணாமல் டென்ஷனாக இருக்கிறாள்.

அடுத்த நாள் காலையில் கல்யாணத்திற்கு ஏற்பாடுகள் நடக்க ரஞ்சனி வள்ளியிடம் என்ன ஆயிற்று என்று விசாரிக்க, ஆதாரம் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தாச்சு அவனுடைய போன் மட்டும் எடுக்கணும் அதுக்காக தான் வேலன் போயிருக்கான். அவன் பார்த்துப்பான், நீ கவலைப்படாத என்று சொல்கிறாள்.
இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை மற்றும் மணமகளை மேடையில் ஏற்றுகின்றனர். திடீரென மாப்பிள்ளை இன்னும் கொடுக்க வேண்டிய வரதட்சனை எதுவும் வந்து சேரல என்று பிரச்சனை செய்ய மாப்பிள்ளையின் தாய் மாமா தாலி கட்டாதடா என்று கல்யாணத்தை தடுத்து நிறுத்துகிறார். ரத்தினவேல் வேலன் வந்துருவான் பைல் எல்லாம் வேலன் கிட்ட தான் இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க அதை ஏற்க மறுக்கின்றனர்.
ரஞ்சித் வேலனின் அப்பாவிடம் எங்கே வேலன் என கேட்டு அவரை அடிக்க ரத்தினவேல் ரஞ்சித்தை போட்டு அடிக்கிறார். வேலன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.. அவன் குடும்பத்தை அவமானப்படுத்துவது என்னையே அவமானப்படுத்துவது மாதிரி என ஆவேசப்படுகிறார். வேலன் பணத்தை தூக்கிட்டு ஓடி போய் விட்டதாக பேச வேலன் காயத்துடன் என்ட்ரி கொடுத்து பணம், டாக்குமெண்ட் என எல்லாவற்றையும் கொடுக்கிறார்.
ஒரு ஆக்சிடென்ட் ஆகி விட்டதாகவும் மயங்கி கிடந்ததாகவும் சொல்லி சமாளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications