Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளையராஜாவுக்கு கோடி கோடியா இருந்துமா பணம்? வனிதா கிட்ட பீரோ சாவியை ஜீவாம்மா ஏன் தந்தாங்க: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற பரவலான விமர்சனம் கிடைத்து வருகிறது. எனினும், இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துள்ள வனிதாவுக்காக, இளையராஜா விட்டுத் தந்திருக்கலாம் என்றும் கருத்துக்கள் இணையத்தில் எழுந்த வண்ணம் உள்ளது. இளையராஜா தொடுத்திருக்கும் வழக்கு குறித்து, மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மகள் ஜோவிகாவின் தயாரிப்பில், மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில், தாய்மை ஏக்கத்துடன் தவிக்கும் வனிதாவின் நடிப்பு வியப்பை தருவதாகவும், 40 வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதினால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அலசும் படமாக அமைந்துள்ளது பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது.

Television vanitha ilayaraja

ஓவர் கசமுசா

ஆனால், கவர்ச்சி என்ற பெயரில் ஓவர் கசமுசாவாகவும், முகம் சுளிக்க வைக்கும் டபுள் மீனிங் காட்சிகளாகவும் படத்திற்கான மைனஸாக பார்க்கப்படுகிறது..

இந்நிலையில், Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "நம்ம பாட்டை பயன்படுத்தி வனிதா சம்பாதிக்கிறார் என்ற எண்ணம் இளையராஜாவுக்கு வந்துவிடடது..

இதையெல்லாம் ராஜா சார் செய்யக்கூடாது.. பல கோடி ரூபாய் வைத்திருக்கிறார்.. பல வருடம் கழித்து, கஷ்டப்பட்டு சொந்த பணத்தை வைத்து வனிதா ஒரு படம் எடுக்குறாங்க..

விட்டு தந்திருக்கலாம்

போனால் போகட்டும் என்று விட்டுக் கொடுத்திருக்கலாம்.. எல்லாரையுமே பகைத்து கொண்டு வருகிறார்.. சாமியார் என்றால் ஆன்மீகத்தோடு அமைதியாக இருக்க வேண்டும்.. சாமியார்கள் ஆசை, பாசங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.

எஸ்பிபியுடன் சண்டை, ரஜினிகூட சண்டை, கமல்கூட சண்டை, அஜித் கூட, சண்டை.. இப்ப வனிதா கூட சண்டை.. வனிதா நேரடியாக வீட்டுக்கு வந்து, இளையராஜாவிடம் அனுமதி வாங்கியதாகவும் சொல்கிறார்.. அப்போது அனுமதி தந்துவிட்டு, இப்போது வந்து கேஸ் போடுவது சரியில்லை..

அதேபோல, இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியது என்கிறார் வனிதா.. கார்த்திக் ராஜாவை நினைத்து இப்படி சொல்கிறாரா தெரியவில்லை.. அல்லது வேறு யாரையாவது சொல்றாங்களா தெரியவில்லை.. ஆனால், இளையராஜா வீட்டில், ஜீவாம்மா இருக்கும்போது

விருந்தாளிகளுக்கு கிஃப்ட்

ஒவ்வொரு வருடமும் கொலு வைப்பார்கள்.. மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் அந்த விழாவில், எஸ்பிபி சார், ஜானகியம்மா, சுசிலாம்மா எல்ஆர் ஈஸ்வரி, எம்எஸ்வி உட்பட எல்லாருமே கலந்து கொள்வார்கள்.. இதற்காகவே பிரத்யேகமாக அழைப்பு விடுக்கப்படும்.. வந்திருக்கும் விருந்தாளிகள் அனைவருக்கும் கிஃப்ட் தருவார்கள்..

அப்படித்தான் 2 , 3 முறை வனிதா தரப்பினர் சென்றதுபோல தெரிகிறது.. அப்போது ஜீவாம்மா சாவி தந்து, நகையை பீரோவில் வைக்க சொல்லியிருக்கிறார்.. மிகப்பெரிய நடிகை மஞ்சுளாவின் மகள் என்தபால், அந்த அபிமானத்தில் சொல்லியிருக்கலாம்.. ஜீவாம்மா காட்டிய பாசத்தை வைத்து, அந்த வீட்டுக்கு மருமகளாக போகலாம் என்று வனிதா நினைத்திருக்கலாம்.

திருமண பேச்சுவார்த்தை?

ஆனால், சம்பந்தம் பேச்சுவார்த்தை நடந்ததா தெரியவில்லை.. அப்படியிருந்தால், அதை வனிதாவே சொல்லியிருப்பாரே? அப்படியான பேச்சுவார்த்தை நடந்ததாக தெரியவில்லை. ஏனென்றால், தன்னுடைய மகளை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று மஞ்சுளாம்மா அப்போது உறுதியாக இருந்தார். அதன்படியே வனிதாவும் சினிமாவுக்குள் வந்துவிட்டார்.

எனவே, வனிதா இப்போது சொல்வதை உண்மை என்று சொல்ல முடியாது.. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.. அதேசமயம், பொய் என்றும் சொல்ல முடியாது.. ஏனென்றால், இப்போதுவரை வனிதா சொன்னதை எதிர்தரப்பிலிருந்து யாரும் மறுக்கவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+