வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. திருமண புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்து
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுபிக்க்ஷா தனக்கு திருமணம் முடிந்ததை புகைப்படங்களோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான ரஜினி சீரியலில் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான சுபிக்க்ஷா நடிகை தேவயானி நடித்த நீதானே என் பொன்வசந்தம் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு பிறகு பல சீரியல்களில் தொடர்ந்து இவர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஜீ தமிழில் வீரா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவர் நல்லவரா? கெட்டவரா? என்று யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கிறார்.

தன்னுடைய காதலனை கொலை செய்த குடும்பத்திற்கு வாக்கப்பட்டு சென்று அந்த குடும்பத்தில் இருக்கும் கதாநாயகன் மாறனை பழிவாங்க வேண்டும் என்று இவர் முயற்சி செய்து கொண்டிருக்கும் போது மாறன் தன்னுடைய தங்கையை காதலிக்கிறார் என்ற விஷயம் தெரிய வந்திருக்கிறது. அதோடு தன்னுடைய தங்கை வீராவிற்கு அவசரமாக வேற கல்யாணம் செய்து வைத்து மாறனை பழிவாங்க வேண்டும் என்று இவர் போடும் பிளான் ஜெயித்ததா? இல்லையா? அடுத்து இவர் என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கறது. ஏற்கனவே சுபிக்க்ஷாவிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு கொரியோகிராபர் மானசஸூடன் திருமணம் நடைபெற்றது. அந்த நேரத்தில் இருவரும் அதிகமான புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.

ஆனால் பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அது உண்மையா? வதந்தியா? என்று குழப்பமான சூழ்நிலையில் தான் ரசிகர்கள் இருந்தனர். இரண்டு பேரும் தங்களுடைய தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அந்த நேரத்தில் கொடுக்காமல் இருந்த நிலையில் சுபிக்க்ஷாவும் மானஸும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் நீக்கி இருந்தனர்.
இந்த நிலையில் அவருக்கு பல சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் கேரள முறைப்படி கேரளாவில் நடைபெற்றிருக்கிறது. அதில் பெரிய அளவில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. அதனால் ரிசப்ஷன் சென்னையில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குருவாயூரில் நடைபெற்ற இவர்களுடைய திருமண நிகழ்வில் இருவீட்டு பெரியவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவருக்கு பல சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் கேரளா முறைப்படி கேரளாவில் நடைபெற்றிருக்கிறது. அதில் பெரிய அளவில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. அதனால் ரிசப்ஷன் சென்னையில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குருவாயூரில் நடைபெற்ற இவர்களுடைய திருமண நிகழ்வில் இருவீட்டு பெரியவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications