விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அவருடைய மகள்? சர்ச்சைக்கு மத்தியில் வெளியான போஸ்ட்! இதுதான் விஷயமா?
சென்னை: தமிழக அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை எடுத்து வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சி பெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், அவர் முதலமைச்சராக பதவியேற்பாரா இல்லையா என்ற கேள்வி இன்னும் உறுதியான பதிலை பெறாமல் உள்ளது. இந்த அரசியல் பரபரப்புக்கு இணையாக, தற்போது சமூக வலைதளங்களில் ஒரு புதிய சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் மகள் பெயரில் வைரலாகும் கணக்கு
விஜய்யின் மகள் திவ்யா சாஷா பெயரில் ஒரு சமூக வலைதள அக்கவுண்டில் வெளியிடப்பட்ட பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அந்த கணக்கில் இதுவரை 10 பதிவுகள் மட்டுமே உள்ளன. ஒன்றில் விஜயின் குடும்ப புகைப்படம் இடம்பெற்றிருக்க, மற்றொன்றில் விஜய் குடும்பத்துடன் இருக்கும் போல உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ பதிவாக பகிரப்பட்டுள்ளது. மீதம் உள்ள போஸ்ட்களில் சாஷா தன்னுடைய தோழிகளுடன் இருப்பது போன்று சில புகைப்படங்கள் இருக்கிறது.
இந்த கணக்கு உண்மையில் விஜயின் மகள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ ஐடியா தானா? அல்லது ரசிகர்கள் உருவாக்கிய போலியான கணக்கா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வராததால், இந்த கணக்கின் நம்பகத்தன்மை குறித்து குழப்பம் நிலவுகிறது.
ரசிகர்களின் எதிர்வினைகள்
இந்த பதிவுகளை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் விஜய் குடும்பம் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளனர்.
இன்னும் சிலர், அந்த ஐடி விஜய் மகளுடையது என்று நினைத்து, "சாஷா நீங்க உங்க அம்மா விட்டு பிரிந்து அப்பாவுடன் சேர்ந்து இருக்க வேண்டும்" என வேண்டுகோள்களையும் முன்வைத்துள்ளனர். மற்றொரு பகுதி, இது போலியான கணக்கு இருக்கலாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
ஏற்கனவே விஜயின் குடும்ப வாழ்க்கை குறித்து பல வதந்திகள் பரவி வரும் சூழலில், அவரது மனைவி விவாகரத்து கோரியதாக கூறப்பட்ட செய்திகள், குழந்தைகள் அவருடன் பொதுவாக வெளியே வராத விஷயங்கள் ரசிகர்களிடையே விவாதமாக இருந்தது. இந்த புதிய சமூக வலைதள கணக்கு அந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

அரசியல் சூழ்நிலையுடன் இணையும் சர்ச்சை
இதே நேரத்தில், அரசியல் ரீதியாக விஜய் மிக முக்கியமான கட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான முழுமையான பெரும்பான்மை இன்னும் கிடைக்காத சூழ்நிலை நீடிக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், ஆதரவு கடிதங்கள், எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு ஆகியவை அனைத்தும் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளன.
இந்த சூழலில், விஜயைச் சுற்றி உருவாகும் தனிப்பட்ட மற்றும் சமூக வலைதள சர்ச்சைகள் கூட அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் போலியான கணக்குகள் மூலம் பரவும் செய்திகளை மக்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
மொத்தத்தில், ஒருபுறம் முதலமைச்சர் பதவி குறித்த அரசியல் சிக்கல்கள், மறுபுறம் குடும்பம் மற்றும் சமூக வலைதள சர்ச்சைகள்-இவ்விரண்டும் இணைந்து விஜயை மையமாகக் கொண்டு தமிழகத்தில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளன.
இந்த நிலையில், உண்மை தகவல்கள் வெளிவரும் வரை வதந்திகளை தவிர்த்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications