சத்தம் இல்லாமல் சாதித்த பாக்கியலட்சுமி சீரியல்.. இத்தனை வெற்றிகளா?கடைசியில் இப்படி ஆகிவிட்டது
சென்னை: விஜய் டிவியில் 8வது டெலிவிஷன் விருது வழங்கும் விழா நடைபெற்று இருக்கிறது.
அதில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நடிகைகளுக்கு அதிகமான விருதுகள் கிடைத்திருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகி மற்றும் வில்லி இருவருக்கும் கிடைத்த விருதுகளோடு அவர்கள் பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார்.
விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் சிறந்த சீரியல்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது எட்டாவது டெலிவிஷன் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அதற்காக பல்வேறு கேட்டகிரியில் பலருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

நேற்று நடந்து முடிந்த இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழாவில் அதிகமான விருதுகளை பாக்கியலட்சுமி சீரியல் குழு பெற்றிருக்கிறது. அதில் பாக்யாவை எதிர்த்து நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ராதிகா கேரக்டரில் நடித்து வரும் ரேஷ்மா பசிபுலேட்டிக்கு சிறந்த வில்லிக்கான விருது கிடைத்திருக்கிறது.
கோபி விட்டு சென்றாலும் குடும்பத்தை தனியாக நின்று நடத்தும் பாக்கியாவிற்கு சிறந்த ஹீரோயின் விருது கிடைத்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் எல்லாவற்றையும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் செல்விக்கு சிறந்த காமெடியன் என்ற விருது கிடைத்திருக்கிறது. அதுபோல சிறந்த மகனுக்கான விருது எழிலுக்கும் கிடைத்திருக்கிறதாம்.

தற்போது இந்த அவார்ட் ஃபங்ஷனில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் இந்த சீரியலின் கதாசிரியரான பிரியா தம்பியும் தன்னுடைய கையில் அவார்டு வைத்திருப்பதால் அப்போது அவருக்கு சிறந்த கதாசிரியருக்கான விருது கிடைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலுக்கு சிறந்த சீரியலுக்கான விருதும் கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் கதாநாயகனாகவும் பல நேரங்களில் பலருடைய திட்டுக்களை வாங்கிக் கொண்டும் காமெடியாகவும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டு வரும் கோபிக்கு எந்த அவார்டும் கிடைத்த மாதிரி தெரியவில்லை. இதனால் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் கோபியாக நடித்துவரும் சதீஷும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் இந்த சீரியலில் இருந்து இன்னும் 10 அல்லது 15 எபிசோடுகளில் வெளியேறி விடுவேன் என்றும் கூறியிருக்கிறார். நான் எதற்காக வெளியேறி விட்டேன் என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றை இப்போது சொல்ல முடியாது என்றும் கூறியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
-
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு!












Click it and Unblock the Notifications