விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் பிரைம் டைம் சீரியல்.. கதாநாயகன் வெளியிட்ட பதிவு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் சமீர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சீரியல்கள் நாளுக்கு நாள் மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில சீரியல்கள் திடீரென்று அடுத்தடுத்து முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரத்தில் சன் டிவியில் டாப் சீரியலாக இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் திடீரென முடிவுக்கு வந்தது.

அதை தொடர்ந்து இப்போது விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஒரு சீரியலும் முடிவுக்கு வர இருக்கிறது. அது மோதலும் காதலும் சீரியல்தான். இந்த சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்று சீரியலில் சாயல் தான். இந்த சீரியலில் நடித்து தான் நடிகை பிரியா பவானி சங்கர் வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதுபோல இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. ஆனால் இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருப்பதாக செய்தியை வெளியாகி இருக்கிறது. இது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பொதுவாக விஜய் டிவி சீரியலுக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். அதுபோல இளைஞர்களை கவரும் வகையிலேயே மோதலும் காதலும் சீரியல் இருந்து வருகிறது. ஆனாலும் இந்த சீரியல் திடீரென முடிவுக்கு வருவதற்கு காரணம் என்னவென்று அதிகாரப்பூர்வமாக சேனல் தரப்பில் இருந்து எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சமீரிடம் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் உண்மையாகவே மோதலும் காதலும் சீரியல் முடிவுக்கு வர இருக்கிறதா? என்று கேட்டிருந்த நிலையில் அதற்கு சமீர் ஆமாம் என்று சொல்லி சிரிக்கிற ஒரு இமோஜியை பதில் கொடுத்து இருக்கிறார். இது இந்த சீரியலின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருப்பதாக அதிகமான கமெண்டுகள் குவிந்து வருகிறது.
மோதலும் காதலும் சீரியலில் விக்ரம் வேதாவிற்கு அதிகமான ஃபேன்ஸ் பாலோவர்ஸ் இருக்கின்றனர். அவர்கள் இந்த செய்தியை வருத்தமாக பகிர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு பிறகு பணிவிழும் மலர்வனம் என்ற சீரியல் இதே நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறதா? என்ற கேள்விகளும் எழும்பி வருகிறது.
காரணம் பணிவிழும் மலர்வனம் என்ற சீரியலின் ப்ரோமோ ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது. அந்த சீரியலில் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் சித்தார்த் தான் இந்த சீரியலிலும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். ஆனாலும் மோதலும் காதலும் சீரியல் முடிவடைந்த பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி!











Click it and Unblock the Notifications