ரஜினி சொன்ன மாதிரி, காது கேட்காத தவளையாக தான் நான் வாழ்ந்துட்டு இருக்கிறேன்! நெகிழ வைத்த விக்ரம் பிரபு
சென்னை: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் பிரபு சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட வெற்றி விழாவில் மிகவும் உணர்ச்சிகரமாக பேசியது தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் பிரபுவின் மகனும், நடிப்புத் திலகம் சிவாஜி கணேசனின் பேரனுமான விக்ரம் பிரபு, சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்ததாக அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஸ்கூலில் ஒதுக்கி வைத்தார்கள்
சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிறை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது அந்த படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது விக்ரம் பிரபு, "நான் நடிகர் ரஜினி சார் சொன்ன மாதிரி தான் என்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் ரொம்ப அமைதியாகவும், தனிமையாகவும் இருந்தேன். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எல்லோரும் என்னை வேற மாதிரி பார்த்தார்கள்.
'இவன் அந்த நடிகரின் மகன்... அந்த நடிகரின் பேரன்' என்று சொல்லி என்னை ஒரு மாதிரி ஒதுக்கி வைத்தார்கள். அந்த நேரங்களில் ரொம்ப தனிமையாக இருந்தது," என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றாலும் அமைதி இல்லை
அந்த தனிமையை மறக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து வெளிநாட்டில் படிக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். "அதற்குப் பிறகு நான் அமெரிக்காவுக்கு படிக்கப் போனேன். ஆனால் அங்கே போன பிறகும் மன அமைதி கிடைக்கவில்லை. சுற்றிலும் யாரும் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் தான் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தேன்," என்று விக்ரம் பிரபு கூறியுள்ளார்.
நடிப்புதான் என் பாதை
இந்தியாவிற்கு திரும்பிய பிறகு தான் இனி நடிப்புதான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"வீட்டில் அப்பாவிடம் நான் நடிக்கப் போகிறேன் என்று சொன்னபோது முதலில் அவர் 'உன்னால முடியுமா?' என்று கேட்டார். நான் பள்ளியில் சந்தித்த அவமானங்களையும், என்னை ஒதுக்கி வைத்த சம்பவங்களையும் அப்போது அவரிடம் சொல்லவில்லை. 'பார்ப்போம்' என்று மட்டும் சொன்னேன்," என்று அவர் கூறினார்.
கும்கி தான் தொடக்கம்
அந்த தைரியத்தில்தான் தனது முதல் படமாக Kumki படத்தில் நடித்ததாகவும் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இன்று தனது முயற்சியால் சினிமாவில் தனி இடத்தை உருவாக்கி வருகிறார்.
வாரிசு நடிகர்கள் சந்திக்கும் சவால்கள்
பொதுவாக சினிமா பிரபலங்களின் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்களும் குறைவில்லை.
"அவர்களுக்கு எல்லாம் சுலபம் தான்" என்ற ஒரு எண்ணம் பலரிடமும் இருக்கும். இதனால் அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவும், நடித்த ஒவ்வொரு படமும் அதிகமாக ஒப்பிடப்பட்டு பேசப்படும். அதேபோல் அவர்களின் வெற்றி கூட பல நேரங்களில் அவர்களின் திறமையால் அல்ல, குடும்ப பின்னணியால் வந்தது என்று விமர்சிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
தொடர்ந்து முயற்சி செய்து வரும் விக்ரம் பிரபு
இப்படியான சூழ்நிலைகளையும் கடந்து விக்ரம் பிரபு தனது முயற்சியால் தொடர்ந்து சினிமாவில் பயணம் செய்து வருகிறார். நடிப்புத் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் என்ற அடையாளத்தை தாண்டி, தனது திறமையால் ரசிகர்களிடம் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த இந்த வெற்றி விழாவில் அவர் உருக்கமாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது நேர்மையான பேச்சுக்கு பலரும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?













Click it and Unblock the Notifications