காலில் அடிபட்டு கட்டுடன் விஜே மணிமேகலை.. சோகத்தில் பதிவு.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரீட்சையமான விஜே மணிமேகலை காலில் கட்டோடு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தனக்கு காலில் எப்படி அடிபட்டது என்பது குறித்து சோகமாக விளக்கமும் கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் மணிமேகலை மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ரசிகர்களும் பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் விஜே மணிமேகலைக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. சமூக வலைத்தளத்திலும் விஜய் டிவியிலும் பிரபலமான ஒரு நபராகத்தான் மணிமேகலை வலம் வந்து கொண்டிருக்கிறார். மணிமேகலை சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து திடீரென்று வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கலந்து கொண்டிருந்தார்.
அதுபோல பல வருடங்களாக தான் ஆசைப்பட்ட படியே தன்னுடைய சொந்த கிராமத்தில் இடம் வாங்கி அங்கு பெரிய பங்களா போன்ற வீடு ஒன்றையும் கட்டிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய சுக துக்கங்களை ரசிகர்களிடம் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் மணிமேகலை இப்போது தனக்கு காலில் அடிபட்டு பெரிய கட்டு போட்டு இருக்கும் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில், "எதிர்பாராத விதமாக வழுக்கும் தளத்தில் கீழே விழுந்துவிட்டேன். காலில் காயம். எழவும் முடியவில்லை. மனசோர்வோடு இருக்கிறேன் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.இந்த நிலையில் ஏற்கனவே மணிமேகலைக்கு சில மாதங்களுக்கு முன்புதான் காலில் வெண்ணீர் சிந்தி கொஞ்ச நாட்கள் அவதிப்பட்டு இருந்தார்.

அதை தொடர்ந்து அப்போதும் இவருக்காக அதிகமான ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர். அதற்குப் பிறகு மணிமேகலை அடுத்தடுத்து தன்னுடைய வாழ்க்கையில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இப்போது திடீரென்று இவருக்கு மீண்டும் காலில் அடிபட்டு இருப்பது குறித்து பலரும் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதுபோல சில மாதங்களுக்கு முன்பு மணிமேகலை திடீரென உடல் எடை கூடி விட்டது குறித்தும் அதிகமான சர்ச்சைகள் பரவி வந்தது. அதாவது மணிமேகலைக்கு உடல் நல பிரச்சனை ஏதும் ஏற்பட்டு விட்டதா? அல்லது கர்ப்பமாக இருக்கிறாரா? என்பது போன்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர். அது குறித்தும் மணிமேகலை விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவருக்கு காலில் அடிபட்டு இருப்பதற்கு பிரபலங்கள் பலரும் வருத்தங்களை தெரிவித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவருக்காக வேண்டிக் கொள்வதாக கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications