அந்த நேரத்தில்! நடிகர் விக்ரம் அப்படி இருப்பார் என்று நினைக்கவே இல்லை.. மனம் திறந்த நடிகை ரேணுகா
சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரையில் பிரபலமாக நடித்து வரும் நடிகை ரேணுகா நடிகர் விக்ரம் பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக திரைப்படங்களில் மீண்டும் நடிக்கும் போது பழசை மறக்காமல் விக்ரம் பேசிய வார்த்தைகளை இப்போது நடிகை ரேணுகா நினைவு கூர்ந்து இருக்கிறார்.

முதல் அறிமுகம்
ஒரு சிலர் மட்டும் தான் திரை வாழ்க்கையில் பல வருடங்களாகவே கொடி கட்டி பறந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கிய சம்சார சங்கீதம் என்ற திரைப்படத்தின் மூலமாக வெள்ளி திரையில் அடி எடுத்து வைத்து பல ஹிட்டான திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து, இப்போதும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரேணுகா தன்னோடு நடித்த நடிகர்கள் பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் நடிகர் விக்ரம் பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார். அதில் ரேணுகா நடித்த பட்டர்பிளை என்கிற படத்தில் ஒரு பக்கத்தில் மம்முட்டி முக்கியமான கதாநாயகனாக நடித்திருந்தாலும், அந்த திரைப்படத்தில் விக்ரம் தான் கதாநாயகன் அந்தப் படத்தில் ஒன்றாக நடித்திருந்தோம். அப்போது விக்ரம் கலகலப்பாக பேசி பழகி கொண்டிருப்பார்
மாறாத குணம்:
ஆனால் பல வருடங்கள் கழித்து நான் விக்ரமை பார்த்தபோது பழசையெல்லாம் நடிகர் விக்ரம் எப்படியும் மறந்து இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. என்னை பார்த்ததும் ஹலோ ரேணுகா..!? என்று ரொம்ப அட்டாச்மென்டா பேசினார். முதல் படத்தில் என்னோடு இருந்த மாதிரி அப்படியே தான் பேசிகிட்டு இருந்தார். அதை நான் பார்த்து வியந்து போய் விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதிகமான திட்டல்கள்
கோப்ரா படத்தில் விக்ரமோடு நான் நடிக்கும்போது அவரை அதிகமாக திட்டுவது போன்ற சீன் இருக்கும். அப்போதெல்லாம் அவர் சிரித்துக் கொண்டே திட்டுங்க திட்டுங்க இன்னும் என்னவெல்லாம் திட்டனும் என்று தோன்றுகிறதோ அதையும் திட்டுங்க என்று ஆரம்பத்தில் நான் அவரோடு நடிக்கும் போது எப்படி இருந்தாரோ அப்படியே தான் கலாய்த்துக்கொண்டு இருந்தார். எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது இவ்வளவு முக்கியமான கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் இவர் மாறவில்லையே என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றியது என்று ரேணுகா கூறியிருக்கிறார்.

ஹிப் ஹாப் ஆதியோடு நடிப்பு
இப்போது வளர்ந்து வந்து கொண்டிருக்கும் ஹிப் ஹாப் ஆதி போன்ற முன்னணி நட்சத்திரங்களோடு தான் நடித்திருக்கும் அனுபவங்களையும் ரேணுகா பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் ஹிப்பாப் ஆதியுடன் அன்பறிவு திரைப்படத்தில் நடித்திருந்தேன். அவருடைய வளர்ப்பு அம்மாவாக நான் அந்த திரைப்படத்தில் வருவேன். அவருடைய பாசமான கேரிங் எனக்கு ரொம்பவே பிடிக்கும் ரொம்பவே. அன்பா எல்லாத்துகிட்டையும் பேசுவார். அவருடைய பாடல்களுக்கு நானும் ஒரு ரசிகை தான். அது போல சூட்டிங் தாண்டியும் பாசமாக இருப்பார். இப்பவும் பல நடிகர்கள் இந்த மாதிரி கேரக்டரோடு இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications