ஆலியா மானசா ஆரம்பத்தில் பார்த்த வேலை இதுவா? இந்த சம்பளத்தில் இருந்துதானா? உருக்கமான வார்த்தை
சென்னை: தற்போது ஆலியா மானசா இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் ஆரம்பத்தில் பார்த்த வேலை மற்றும் வாங்கிய சம்பளம் பற்றி ஆலியா பேசி இருக்கிறார்.
உருக்கமாக பேசிய ஆலியாவிற்கு கருத்துக்கள் குவிகிறது.

சின்னத்திரை பிரபலமாக இருந்து வரும் ஆலியா மானசா சமூக வலைத்தள ரசிகர்களுக்கு அதிகமான பரிட்சயமானவர்தான். இணையத்திலும் சரி, சின்னத்திரையிலும் சரி அவரும் அவருடைய கணவரான சஞ்சீவ் பலருக்கும் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஆலியா மானசாவின் குழந்தைகளும் இடம் பிடித்திருக்கின்றனர்.
சமூக வலைத்தளத்தில் ஆலியா மானசா தன்னுடைய குழந்தைகளோடு வீடியோ அடிக்கடி வெளியிட்டு வந்த நிலையில் தற்போது குழந்தைகளோடு நடிக்க பல விளம்பர வாய்ப்புகளும் வீட்டு கதவை தட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆலியா மானசா தன்னுடைய குழந்தைகளோடு பிறந்த நாள் பங்ஷன் கொண்டாடி என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதுவும் மகனின் பிறந்த நாளை மாலத்தீவில் போய் குடும்பத்தோடு கொண்டாடிவிட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் தன்னுடைய youtube பக்கத்தில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து ஆலியா பல தகவல்களை கூறியிருக்கிறார். அதில் அவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு Yamaha ஷோரூமில் வேலை செய்தாராம். அதற்கு சம்பளமாக இவருக்கு வெறும் 5000 ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். இது பலருக்கும் வியப்பாக இருந்திருக்கிறது. ஒரு நடிகையாக பலருடைய மனதில் இடம் பிடித்த ஆலியா ஆரம்பத்தில் இப்படி ஒரு வேலையில் தான் இருந்தாரா? என்று பலர் ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நெட்டிசன்கள் சிலர் நாங்கள் இப்ப வரைக்கும் கூட அந்த 5000-க்கு வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இதை அசட்டையாக இவர் கூறுகிறாரே என்று வழக்கம்போல கமெண்ட்களை குவித்து வந்தாலும், இன்னும் ஒரு சில ரசிகர்கள் ஆரம்பத்தில் எப்படியோ இப்போ லட்சத்தில் சம்பளம் வாங்குகிறாரே? இது போதாதா? உழைப்பும் முயற்சியும் இருந்தால் எல்லோருக்கும் வெற்றி தான். என்றெல்லாம் கருத்து கூறி வீடியோவில் லைக் குவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications