பசங்க "அன்பு” சீரியல் நடிகையை அவசரமாக கல்யாணம் செய்ய காரணம் இதுதானா? வெளியான ரகசியம்
சென்னை: பசங்க திரைப்படத்தில் மூலம் அன்பு கேரக்டரில் பலருக்கும் பரிட்சயமான நடிகர் கிஷோர் சமீபத்தில் தான் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை தெரிவித்த சில மாதங்களுக்குள் திடீரென்று திருமணத்தை முடித்து இருந்தனர்.
இந்த நிலையில் எதற்காக அவசர அவசரமாக திருமணத்தை முடித்தோம் என்று கிஷோர் பேட்டி ஒன்றில் உண்மைகளை உடைத்திருக்கிறார்.
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக கிஷோர் அறிமுகம் ஆகி இருந்தார்.. முதல் திரைப்படத்திலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.
முதல் திரைப்படத்தில் ஒரு பாசிட்டிவான குழந்தை கேரக்டரில் நடித்து வந்த கிஷோர் அதைத் தொடர்ந்து, கோலிசோடா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மார்க்கெட்டில் வேலை செய்யும் இளைஞராக நடித்திருப்பார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
அதைத் தொடர்ந்து வஜ்ரம், நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வெள்ளித் திரையில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
ப்ரீத்திக்குமார் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ப்ரீத்தி, கிஷோரை விட நான்கு வயது அதிகமானவர். இது குறித்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சைகளும் கிளம்பின. ஆனால் இவர்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர். அது குறித்து அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இப்படியான நிலையில் சமீபத்தில் இருவரும் பேட்டி ஒன்றில் தங்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி பல ரகசியங்களை உடைத்து இருக்கின்றனர். அதில் தாங்கள் எதற்காக சீக்கிரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்றும் கூறியிருக்கிறார்கள். அதற்கான காரணத்தைப் பற்றி கிஷோர் பேசுகையில், ப்ரீத்தியின் அப்பா நான்கு வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தாங்க.
அதனால் அவர் தன்னுடைய பொண்ணோட கல்யாணத்தை சீக்கிரமா பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதுக்காகத்தான் அவசரமாக கல்யாணம் பண்ண வேண்டியது ஆயிட்டு. இல்லனா என்னுடைய 31 வயசுக்கு மேல தான் ப்ரீத்தியை கல்யாணம் பண்ணி இருப்பேன்னு கூறி இருக்கிறார்.
-
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications